புறநானூறு - 66. நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே |
5 |
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, மிகப் புகழ் உலகம் எய்திப், புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 66. நல்லவனோ அவன்!, இலக்கியங்கள், நல்லவனோ, புறநானூறு, அவன், புறப்புண், வெண்ணிப், நாணி, போரில், நல்லன், வாகை, எட்டுத்தொகை, சங்க, குயத்தியார், ஆண்ட, கரிகால்