புறநானூறு - 44. அறமும் மறமும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு :நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ, திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி, நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து, அலமரல் யானை உருமென முழங்கவும், |
5 |
பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்! |
10 |
அறவை யாயின்,நினது எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லை யாகத், திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் |
15 |
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. | 20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 44. அறமும் மறமும்!, இலக்கியங்கள், இல்லாமல், அறமும், புறநானூறு, மறமும், யாயின், திறத்தல், விரும்பினால், இருத்தல், வாகை, எட்டுத்தொகை, சங்க, யானை, மகளிர்