முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 3.வன்மையும் வண்மையும்!
புறநானூறு - 3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, ஏம முரசம் இழுமென முழங்க, நேமி யுய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகைக், கவுரியர் மருக! |
5 |
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! பொன் னோடைப் புகர் அணிநுதல் துன்னருந் திறல் கமழ்கடா அத்து எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். |
10 |
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி! நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்; பொலங் கழற்காற்,புலர் சாந்தின் |
15 |
விலங் ககன்ற வியன் மார்ப! ஊர் இல்ல, உயவு அரிய, நீர் இல்ல, நீள் இடைய, பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் |
20 |
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை, நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் |
25 |
இன்மை தீர்த்தல் வன்மை யானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 3.வன்மையும் வண்மையும்!, இலக்கியங்கள், வருவர், பெரும்பெயர், வன்மையும், கருங்கை, வழுதி, ஒள்வாள், புறநானூறு, வண்மையும், தலையில், வென்றாய், பொன்னாலான, கொண்டது, இரவலர், இல்லாத, அவர்களின், வலிமை, உன்னை, மருந்தில், கவுரியர், இரும்பிடர்த், சங்க, எட்டுத்தொகை, கொண்ட, யானை, வன்கண், நீர், இல்ல, ஆடவர்