முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 229. மறந்தனன் கொல்லோ?
புறநானூறு - 229. மறந்தனன் கொல்லோ?
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது.
ஆடு இயல் அழல் குட்டத்து |
5 |
தலை நாள்மீன் நிலை திரிய, நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத், தொல் நாள்மீன் துறை படியப், பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது அளக்கர்த் திணை விளக்காகக், |
10 |
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி, ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே: அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர், பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன் நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென |
15 |
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப, அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே; மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும், காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும், |
20 |
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும், மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித், தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ- பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
25 |
அளந்து கொடை அறியா ஈகை, மணிவரை அன்ன மாஅ யோனே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 227 | 228 | 229 | 230 | 231 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 229. மறந்தனன் கொல்லோ?, உடைய, போலும், கொல்லோ, மறந்தனன், இலக்கியங்கள், நாள்மீன், புறநானூறு, மகளிர்க்கு, ஆகலின், அளந்து, அதற்கு, போகாது, மீனாகிய, எட்டாம், உருளவும், நட்சத்திரம், பல்வேறு, துறை, திணை, சங்க, எட்டுத்தொகை, அவன், பங்குனி, பரப்ப, இரவலர், யாமும், நிலை, யானை