முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 364
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 364
வளர்த்து விடும்.”
“நமது நாட்டிலே ஆங்கில ஆளும் வர்க்கத்தாரின் மனப்போக்கை நீங்கள் பார்க்கிறீர்களல்லவா?”
“அவர்கள் குருடர்கள். முப்பது வருடத்திற்கு முந்திய உலகத்திலே அப்படியே அசையாமல் இருக்க விரும்புகிறார்கள். யுத்தத்திற்குப் பிறகும் இந்தப் பழைய போலீஸ்காரர்களின் ஆட்சிக்காகவே உலகம் ஜெயிக்கப்படுவதாக நீங்கள் கருதுகிறீர்களா? இவர்கள் நமது யுத்த முயற்சியிலே ஒவ்வொரு அடியிலும் தடையேற்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஏனெனில், இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடந்த காலக் கண்கொண்டே பார்க்கிறார்கள்.”
“இப்பொழுது பார்க்கவில்லையா? பொதுமேடைகளிலே செல்வாக்குப் பெற்ற திருமுகங்களெல்லாம் இப்பொழுது தேசிய முன்னணியிலே தலைமை தாங்கி, ஜனங்களுக்கு முன்னால் கர்ஜனை செய்கின்றன. நமது கவர்னர்களும், கவர்னர் ஜெனரலும் பொது மக்களைத் தியாகம் செய்யும்படி உபதேசிக்கிறார்கள். நமது நாட்டின் தேசிய வருமானம் ஓர். அணா. அந்தக் கணக்குப்படி பார்த்தால் ஒரு மனிதனுடைய வருமானம் இருபத்தைந்து
ரூபாயாகிறது. நமது வைஸிராய் தேசிய வருமானத்தைப் போல் பத்தாயிரம் மடங்கும், கவர்னர்கள் சற்றேறக்குறைய நாலாயிரத்து எண்ணூறு மடங்கும் சம்பளம் வாங்குகிறார்கள். இவை போக, அவர்களின் செலவுகள் வேறு இருக்கிறது. செலவுகளையும் சேர்த்துப் பார்த்தால் வங்காள கவர்னர் மட்டும் ஒரு தொழிலாளியின் சம்பளத்தைப்போல், நாற்பத்தி இரண்டாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்று ஒரு மடங்கு சம்பளம் வாங்குகிறார். இதோடு இங்கிலாந்தின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அங்கு ஒரு தொழிலாளியின் வாரச் சம்பளம் எண்பத்தைந்து ஷில்லிங்குகள்-அதாவது ஐம்பத்தாறு ரூபாய்கள். விவசாயிகளின் வார வருமானம், நாற்பத்தைந்து ரூபாய்கள். இந்தக் கணக்குப்படி, இங்கிலாந்தின் தேசீய வருமானம் வருடம் ஒன்றுக்கு ஏறக்குறைய இருநூறு பவுன். இதைப்போல் முப்பத்து ஆறுமடங்குதான் இங்கிலாந்தின் பிரதம மந்திரி சம்பளம் வாங்குகிறார். சோவியத் யூனியனில், பிரதம மந்திரியின் சம்பளம் பன்னீராயிரம் ரூபிள்கள். அதே அளவு சம்பளம் வாங்குகிற தொழிலாளிகள் ஏராளமாயிருக்கிறார்கள். அங்கு பிரதமரின் சம்பளத்தை விட ஆறில் ஒரு பங்குக்குக் குறைவாகச் சம்பளம் வாங்கும் தொழிலாளரே கிடையாது.”
“நமது முதலாளிகளின் வருவாயோடு, தேசீய வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது இதயம் வெடித்து விடும்.”
“இது உண்மையிலேயே கொள்ளைதான் சுமேர்!”
“இதனால்தான், இந்தியாவிலே வேலை பார்க்கும் சுயநலமுள்ள
பயங்கொள்ளிகளான இந்த ஆங்கிலேயர்கள் தூரதிருஷ்டியில்லாதவர்கள்; இவர்களிடத்தே நம்பிக்கை வைக்கக்கூடாது என்று நான் சொல்லுகிறேன். இவர்களுக்காகப் போராடவோ, ஜெயிக்கவோ நான் போகவில்லை. உலகத்தின் ஆறிலொரு பகுதியிலே பரவியிருக்கும் அந்த ஒளியைப் பாசிஸ்டுகள் அணைத்து விடாமல் இருக்கும் பொருட்டே நான் போராடி மடிய விரும்புகிறேன். மனிதர்கள் சுதந்திரமாகவும், சௌக்கியமாகவும் வாழக்கூடிய அந்த எதிர்கால உலகத்திற்காக, என்னைப் பலியிட விரும்புகிறேன்.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சம்பளம், நமது, வருமானம், நான், இங்கிலாந்தின், பார்த்தால், தேசிய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்