பன்னிரெண்டில் ஒரு பங்கும் விவசாயிகளிடமிருந்து ஆறில் ஒரு பங்கும் பெறுவது சரி என்று. சாஸ்திரம் சொல்லுகிறது. ஆனால், இது சரியா என எனக்குத் தெரியாது. வரி வசூலிப்பது மக்களைக் காப்பாற்றுவதற்கே யாகும். அப்படியிருந்தும் மக்களைக் காப்பாற்ற முடிகிறதா எனத் தெரியவில்லை. அப்படிக் காப்பாற்றாவிட்டாலும் நரகம் போக நேரிடும். எப்படிப் பார்த்தாலும் ஒர் அரசன் நரகம் போவது உறுதி. எனவே இந்த அரசாட்சி எனக்கு வேண்டாம்" என்று கூறினான். அங்கு இருந்த முனிவர்களில் கார்கா என்பவர், “அரசனே! நீ எதற்கும் பயப்பட வேண்டாம். தத்தாத்ரேய முனிவர் சாயா என்ற மலையில் ஒரு குகையில் வசித்து வருகிறார். தத்தாத்ரேயர் எப்படிப்பட்டவர் என்று உனக்குச் சொல்கிறேன், கேள். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில் தேவர்கள் நன்றாக அடி வாங்கினர். அவர்கள் ஒடிச்சென்று தத்தாத்ரேயரிடம் முறையிட்டனர். முனிவர் அவர்களைப் பார்த்து இன்னும் ஒருமுறை அசுரர்களோடு போரிடுங்கள். போரிட்டுக் கொண்டே தான் இருக்கும் இடத்திற்கு அவர்கள் வரும்படி செய்யுங்கள் என்று கூறினார். அவர் சொன்னபடியே தேவர்களும் அசுரர்களைப் போருக்கு அழைத்தனர். போர் நடக்கையில் அசுரர்கள் தத்தாத்ரேயர் இருக்கும் இடத்திற்கு வருமாறு செய்தனர். தத்தாத்ரேய முனிவர் மகாவிஷ்ணு அவதாரம் ஆகையால், இலக்குமி அவர் கூடவே இருந்தார். இலக்குமியைப் பார்த்ததும் போர் நடப்பதை மறந்து இலக்குமியைத் தூக்கிக் கொண்டு ஒட முயன்றனர். ஒரு பல்லக்கில் இலக்குமியை வைத்து அப்பல்லக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஒட ஆரம்பித்தனர். முனிவரின் உத்தரவுப்படி தேவர்கள் அந்த நேரத்தில் போர் தொடுத்தனர். அசுரர்கள் யாவரும் அழிந்து விழுந்தனர். இதற்கு ஒரு காரணம் உண்டு. இலக்குமி ஒருவருடைய கால் பக்கம் இருக்கும் போது, அவனுக்கு வீடு, மனை முதலிய வசதிகள் இருக்கும் இலக்குமி ஒருவனுடைய தொடைப் பக்கம் இருக்கும்போது அவனுக்குக் குழந்தைகள் பிறக்கும் இலக்குமி ஒருவனுடைய இதயத்தில் இருக்கும் போது அவன் எல்லா ஞானமும் பெறுவான்; இலக்குமி ஒருவனுடைய தலைப் பக்கம் இருந்தால் அவள் அவர்களை விட்டுப் போகப் போகிறாள் என்று அர்த்தம். இப்பொழுது அசுரர்கள் இலக்குமியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதால் அவள் அவர்களை விட்டுப் போய் விட, அசுரர்கள் போரில் மடிந்தனர். கார்கா சொன்னதைக் கேட்ட அருச்சுனன் தத்தாத்ரேயரிடம் சென்று அவரை வழிபட்டு, பல வரங்களைப் பெற்றான். ஒன்று, ஆயிரம் கைகளை உடையவனாக இருப்பது இரண்டு, ஈடு இணையற்ற உலகத்தின் தலைசிறந்த வீரனாலேயே தான் கொல்லப்பட வேண்டுமென்பது எல்லா இடங்கட்கும் செல்லக் கூடிய ஆற்றலைப் பெறுவது; பகைவர்கள் இருக்குமிடத்தை மானசீகமாகக் கண்டு அறிவது.
இந்த வரங்களைப் பெற்றுக் கொண்ட அருச்சுனனுடைய முடிசூட்டு விழா மூன்று உலகத்திலும் உள்ள பெரியோர்களெல்லாம் வந்து காணுமாறு நடைபெற்றது. அவன் ஹைஹய நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
அலார்க்கா
முன்னொரு காலத்தில் மிக்க பலம் வாய்ந்த சத்ருஜித் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ரிதத்துவஜா என்ற மகன் இருந்தான். அரசகுமாரனாகிய அவன் பலத்தில் இந்திரனையும், அழகில் அஸ்வினிகளையும், அறிவுக் கூர்மையில் பிருஹஸ்பதியையும் ஒத்து இருந்தான். நற்பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவனுக்கு பிராமண, க்ஷத்டித்திரிய, வைசியர்களில் பல பல நண்பர்கள் இருந்தனர். அதே நேரத்தில் நாக லோகத்தில் இருந்து அஸ்வதாரா என்ற மன்னனின் மைந்தர்கள் இருவர் ரிதத்துவஜாவிடம் நட்புக் கொண்டனர். அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்ட இருவரும், பகலெல்லாம் இவனுடன் இருந்துவிட்டு இரவு நேரத்தில் மட்டும் தங்கள் உலகிற்குச் சென்றனர். ஒருநாள் அஸ்வதாரா தன் மைந்தர்களைப் பார்த்து, “பிள்ளைகளே! பல நாட்களாகப் பகல் நேரத்தில் உங்களைக் காணவே முடியவில்லை. இரவில் மட்டும் இங்கே வருகிறீர்கள். பகல் பொழுதை எங்கே கழிக்கிறீர்கள்?" என்று கேட்டவுடன், மைந்தர்கள் இருவரும் ரிதத்துவஜா பற்றியும், அவனுடைய பராக்கிரமம், நற்பண்புகள் பற்றியும்