மார்க்கண்டேய புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
மாண்டவி முனிவரை வென்றவள்
பிரதிஷ்தானா என்ற நகரத்தில் ஒரு பிராமணன் வசித்து வந்தான். அவன் தொழுநோயாளியாக இருந்த போதிலும், அவன் மனைவி அவனுடைய நோய்க்கு மருந்திட்டு அவனைக் காப்பாற்றி வந்தாள். சிடுமூஞ்சியாகிய அந்த பிராமணன் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டும், கற்பு நிலை வழுவாது அவன் மனைவி அவன்பால் எல்லையற்ற அன்புடையவளாய் நடந்து கொண்டாள். ஒருமுறை மேகங்கள் சூழ்ந்து ஒரே இருட்டாக இருக்கின்ற நேரத்தில், பிராமணன் வெளியே செல்ல வேண்டுமென்று சொன்னான். அவன் மனைவி இருட்டைப் பொருட்படுத்தாமல் அவனைத் தோளில் சுமந்து கொண்டு உலாவுவதற்குப் புறப்பட்டாள். நன்கு வழி தெரியாமையாலும், எதிரே இருப்பவர்கள் யார் என்று அறிய முடியாத இருட்டு ஆகையாலும் நோயாளியைத் தூக்கிச் சென்ற பொழுது, அந்த நோயாளியின் கை மற்றொருவர்மேல் பட்டு அவருடைய தவத்தைக் கலைத்து விட்டது. தவம் கலைந்த மாண்டவி முனிவர், “யாருடைய எந்த உறுப்புப் பட்டு என் தவம் கலைந்ததோ, அந்த உறுப்பை உடையவன் சூரிய உதயமானவுடன் இறந்து விடுவான்” என்று சாபம் கொடுத்தார். இந்தச் சாபத்தைக் காதில் வாங்கிக் கொண்ட பிராமணன் மனைவி கண் தெரியாத இருட்டில் எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த மிகச்சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று மனம் பதறிப் போன அவள், சூரிய உதயமே ஆகாமல் போகட்டும்” என்று எதிர் சாபமிட்டாள். கற்புடைய பெண்ணின் சாபம் பலித்தது. பத்து நாட்களாகச் சூரியன் வெளிவரவில்லை. தேவர்கள், பிரம்மனிடம் சென்று முறையிட்டார்கள். பிரம்மன் உடனே காரணத்தை அறிந்து கொண்டார். “ஒரு கற்புக்கரசியின் சாபத்தால் இந்நிலை வந்தது. இதில் நாம் தலையிட்டு ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு கற்புக்கரசியாகிய அனுசுயாவிடம் நீங்கள் சென்று வேண்டிக் கொண்டால் அவர் தலையிட்டு ஏதாவது செய்யலாம்” என்று பிரம்மன் கூறினார். அனைவரும் அனுசுயையிடம் சென்று முறையிட அனுசுயை அந்த ஏழைப் பிராமணத்தியினிடம் வந்து, அவளுடைய சாபத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள். மேலும் மாண்டவியின் சாபத்தால் அவள் கணவன் இறந்தால், அவன் உயிரை மீட்டுத் தரும் சக்தி தனக்கு உண்டு என்றும் அறிவித்தாள். பிராமணன் மனைவி சாபத்தை மீட்டுக் கொண்டாள். சூரியன் புறப்பட்டான், தொழுநோயாளியான பிராமணன் இறந்தான். உடனே அனுசுயை தன் ஆற்றலால் பிராமணன் உயிரை மீட்டாள். அதுமட்டுமல்லாமல், அவன் நோய் தீர்ந்து, இளமை யோடு வாழ அருள் செய்தாள். தேவர்கள் அனுசுயையின் உதவிக்கு நன்றி பாராட்டி அவள் வேண்டும் வரத்தைத் தருவதாகக் கூறினர். அனுசுயை, "திரிமூர்த்திகளும் தனக்குப் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும்” என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். தேவர்கள், "அப்படியே ஆகட்டும்” என்றனர்.
அனுசுயா பெற்ற பிள்ளைகள்
தேவர்கள் கொடுத்த வரப்படியே அனுசுயைக்குத் திரிமூர்த்திகளில் ஒருவராகிய பிரம்மன், சந்திரன் என்ற பிள்ளையாகவும்: விஷ்ணு தத்தாத்ரேயர் என்ற பிள்ளையாகவும் சிவன் துர்வாசர் என்ற பிள்ளையாகவும் தோன்றினர்.
முன்னொரு காலத்தில் கார்த்தவீரியன் என்ற மன்னன் உலகை ஆட்சி செய்து வந்தான். அவன் இறந்த பிறகு அவனுடைய மகனாகிய அர்ச்சுனன் என்பவன் ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டான். “எப்படி ஆட்சி செய்தாலும் அரசன் என்பவன் நரகத்திற்கே போக நேரிடும். வரி வசூலிப்பது என்பதும், வரி விதிப்பது என்பதும் எனக்குப் பிடிக்காத காரியம். வியாபாரிகளிடமிருந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 8 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிராமணன், அவன், மனைவி, தேவர்கள், அந்த, பிள்ளையாகவும், அனுசுயை, அவள், சென்று, பிரம்மன்