மார்க்கண்டேய புராணம் - பகுதி 24 - பதினெண் புராணங்கள்
பிரபஞ்சப் படைப்பு
ஆதியில் தோன்றிய பிரம்மன் தனது வலக்கைச் சுண்டு விரலில் இருந்து தட்சனையும், இடக்கைச் சுண்டு விரலில் இருந்து தட்சன் மனைவியையும் உண்டாக்கினார். தட்சன் மகளான அதிதி, காசிப முனிவரை மணந்து, மார்த்தாண்டா என்ற பெயருடன் துரியனைப் பிள்ளையாகப் பெற்றார்கள். பிரபஞ்சத் தொடக்கத்தில், பிரம்மாண்டமாகிய முட்டையிலிருந்து பிரம்மனுடன் சேர்ந்தே சூரியனும் உடன் தோன்றி னான். அவனுடைய வெப்ப மிகுதியால் பிரம்மன் படைப்புச் சீர் குலைந்தது. செடி கொடிகள் கருகின. தண்ணீர் ஆவியாகப் போய்விட்டது. இவை இரண்டும் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாதாகையால், பிரம்மன் சூரியனைக் குறித்துத் தவம் இயற்றினான். மனம் இரங்கிய சூரியன் தன் சக்தியைக் குறைத்துக் கொண்டான். நீர் வந்தது. செடி கொடிகள் வந்தன. விலங்குகள் தோன்றின. பின், மனிதனும் தோன்றினான். பிரம்மனே தேவர்களையும், அவர்களுக்கெதிரான தைத்திரியர்களையும், நாகர்களையும் படைத்தான்.
பிரம்மாவின் மற்றொரு பிள்ளை மாரீச்சி. மாரீச்சியின் மகனே காசிபன். காசிபன் தட்சனுடைய பதின்மூன்று பெண் களை மணந்தான். அதிதியின் மக்களாகிய அதித்தியர்களுக்கும், திதியின் மக்களாகிய தானவர்களுக்கும் போர் நடந்தது. அதிதி சூரியனை வேண்டி, மார்த்தாண்டா என்ற சூரியனையே மகனாகப் பெற்றுத் தைத்திரியர்களை வென்றனர்.
முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்தனா என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்தான். அவன் அரசாட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நாட்டில் பஞ்சம் நோய் எதுவுமின்றி மக்கள் வாழ்ந்தனர். அரசன் ஏழாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
அரசனின் மனைவிக்கு மனினி என்பது பெயர். அரசனின் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடும் பொழுது அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் அரசன் மேல் விழுந்தது. அரசன் வியப்புடன் “எதற்காக அழுகிறாய்?" என்று கேட்டான். அரசி சிறிது மெளனம் சாதித்து, பின்பு அரசன் தலையில் வெண்முடி இருப்பதைக் கூறினாள். அதைக் கேட்ட அரசன் சிரித்து விட்டு, “நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்திருக்கிறேன். இது முதுமை அடைந்து விட்டேன் என்பதற்குச் சாட்சி ஆகும். நான் காட்டிற்குச் செல்லும் நேரம் வந்து விட்டது” என்று கூறினான்.
இதை அறிந்த மக்கள் பெரிதும் வருத்தமுற்றனர். அரசன் காட்டிற்குச் சென்று விட்டால் நாட்டின் சுபிட்சம் மறைந்து விடும் என்று கருதினர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டு வதற்கு நாள் பார்க்கும்படி கூறியும், வேண்டுமென்றே நாளைக் குறிப்பதில் தாமதம் செய்தனர். அரசனைப் போகக்கூடாது என்று பிராமணர்கள் பலர் கூறினர். அரசன் அவர்கள் வார்த்தையைக் கேட்கவில்லை. உடனே பிராமணர்கள் அனைவரும் கூடி, காமரூபம் என்ற காட்டில் உள்ள சூரியன் கோயிலுக்குச் சென்று தவம் செய்தார்கள். மூன்று மாதம் ஆனவுடன் சூரியன் தோன்றினான். பிராமணர்கள் துரியனை வணங்கித் "தங்கள் அரசன் இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் இளமையோடு இருந்து அரசாட்சி செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்கள். சூரியன் அந்த வரத்தைக் கொடுத்ததும் பிராமணர்கள் மகிழ்ச்சியோடு வந்து அரசனிடம் கூறினார்கள். அரசன் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக வருத்தப்பட்டான். ஏனென்று கேட்டபொழுது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 24 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அரசன், பிராமணர்கள், சூரியன், இருந்து, பிரம்மன், மக்கள்