மார்க்கண்டேய புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
நாக மன்னன் தந்த பரிசு
நாகலோக அரசனாகிய அஸ்வதாரா, தன் பிள்ளைகள் மூலம் அரசகுமாரன் கதையினைக் கேள்விப்பட்டு இமயம் சென்று சரஸ்வதியை நோக்கித் தவம் செய்தான். சரஸ்வதி வெளிப்பட்டதும், உலகில் ஈடு இணையற்ற பாடகனாகத் தான் ஆகவேண்டும் என்று வரம் கேட்டான். அந்த வரத்தைப் பெற்றுக் கொண்டு கைலயங்கிரிக்குச் சென்று சிவன் காதில் படும்படியாக அற்புதமாகப் பாடினான். மகிழ்ந்த சிவன், “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, "ஐயனே! இறந்து போன மதலசா எனக்கு மகளாக வரவேண்டும். அது குழந்தையாகப் பிறந்து வளராமல், அவள் இறக்கும் பொழுது, எந்த வயதுடன் எவ்வளவு அழகுடன் இருந்தாளோ அப்படியே என் மகளாகப் பிறக்க வேண்டும்” என்று வரம் கேட்டான். அப்படியே ஆகட்டும் என்று சிவன் சொல்ல, நாக மன்னனாகிய அஸ்வதாரா உண்மையில் பல தலைகள்ை' (படங்கள்) உடைய நாகம் ஆதலால், ஒரு படத்தில் இருந்து மதலசா வந்தாள். அவளை அழைத்து வந்த அஸ்வதாரா, தன் பிள்ளைகளுக்குக் கூட அவள் வருகையை அறிவிக்க வில்லை. தன் பிள்ளைகளை அழைத்து, "இத்தனை முறை பூலோகம் சென்று ரிதத்துவஜாவுடன் பொழுதைக் கழிக்கிறீர்களே. ஒருமுறை அவனை இங்கு அழைத்து வாருங்கள்” என்றான். பிராமண வடிவுடன் அந்தப் பிள்ளைகள் ரிதத்துவஜாவுடன் இருப்பது வழக்கம். அதே வடிவுடன் சென்று அவனைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். பின் மூவருமாக அங்கே வந்தனர். நண்பர்கள் மூவரும் கோமதி ஆற்றின் நடுப் பகுதியில் நாகலோகம் செல்லும் வழி இருந்ததால், அதில் இறங்கினர். இப்பொழுது நண்பர்கள் இருவரும் நாக வடிவு எடுத்ததைக் கண்ட அரசகுமாரன் ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் இருவரும் தங்கள் கதையைச் சொல்லி, நாக லோக மன்னனாகிய தங்கள் தந்தை அஸ்வதாராதான் ரிதத்துவஜாவை அழைத்து வர ஏவினான்’ என்ற உண்மையையும் கூறினார்கள். மகிழ்ந்த அரசகுமாரன் நாகலோகத்தில் இறங்கி பாம்பு வடிவத்தில் இருந்த அஸ்வதாரா மன்னன் பொன்னும் மணியும் இறைத்த சிம்மாசனத்தில் இருக்க, வணக்கம் செய்தான். மன்னன் அஸ்வதாரா, “அரசகுமாரனே! என் பிள்ளைகள் மூலம் உன்னுடைய அறிவு, அழகு, பராக்கிரமம் ஆகியவற்றை அறிந்தேன். என் பிள்ளைகளிடம் நீ காட்டிய அன்புக்குரிய பரிசாக ஏதாவது ஒன்றைத் தர விரும்புகிறேன், கேள்” என்றான். அது கேட்ட அரசகுமாரன், “நாக மன்னரே! நன்றி பெரிதும் உடையேன். என் தந்தையிடம் எல்லாச் செல்வங் களும் நிறைந்திருக்கின்றன. எனக்குள் பேராசை கிடையாது. நான் எதையும் விரும்பவில்லை” என்று கூறினான். அது கேட்டு மகிழ்ச்சி அடைந்த நாக மன்னன், “நல்லது அரச குமாரனே. இந்த உலகப் பொருள்களில் உனக்குப் பற்று இல்லை என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும் நீ வியப்படையக்கூடிய பரிசினை உனக்கு வழங்கப் போகிறேன்” என்று கூறி, மதலசாவை வரவழைத் தான். வியப்பால் திடுக்குற்ற அரசகுமாரன் இது ஏதோ மாயை நாடகம் என்று நினைத்து விட்டான். அவன் குழப்பத்தை அறிந்த மன்னன் நடந்தவற்றைக் கூறி, "இப்பொழுது என் மகளாகப் பிறந்த இவளை ஏற்றுக் கொண்டு நெடுநாள் வாழ்வாயாக’ என்று ஆசீர்வதித்தான். அங்குத் தங்கி அவன் உபசரிப்பை ஏற்றுக் கொண்ட அரசகுமாரன், மனைவியோடு தன் நாட்டிற்கு வந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 11 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அரசகுமாரன், மன்னன், அஸ்வதாரா, சென்று, அழைத்து, நண்பர்கள், ", தங்கள், சிவன், பிள்ளைகள், மதலசா, வந்த, என்றான், அவன், வரம்