மார்க்கண்டேய புராணம் - பகுதி 25 - பதினெண் புராணங்கள்
தந்தையும் மைந்தனும்
மார்த்தாண்டனின் பரம்பரையில் வந்த கரந்தமா என்பவனுக்கும், அவன் மனைவி கிரா என்பவளுக்கும் பிள்ளையாகப் பிறந்தான் அவிட்சிதா, இவனுடைய மகன் மருத்தா என்பவனாவான். மருத்தாவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அவிட்சிதா தவம் ஏற்கப் போய்விட்டான். ஒருநாள் மருத்தாவிடம் சில முனிவர்கள் வந்து, “அரசே! எங்கள் ஆசிரமம் இருக்கும் இடத்தில் பாம்புகள் தொல்லை மிகுதியாக உள்ளன. அவற்றைக் கொல்லும் சக்தி எங்களிடம் உள்ளது என்றாலும் முனிவர்களாகிய நாங்கள் உயிர்களைக் கொல்லக்கூடாது. எங்களைக் காப்பது அரசனுடைய கடமை” என்று கூறினார்கள். அதைக்கேட்ட அரசன் தக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்று பாம்புகளை எல்லாம் கொன்று தீர்த்தான். சில பாம்புகள் ஒடிச்சென்று மருத்தாவின் தந்தை அவிட்சாவிடம் முறையிட்டான். அவிட்சா மகனிடம் வந்து, "மகனே, பாம்புகளைக் கொல்லுவதை நிறுத்திவிடு” என்று கூறினான். மருத்தா தந்தை சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல், “என்னுடைய கடமை முனிவர்களைக் காப்பது? அவர்களுக்கு இடையூறு செய்யும் பாம்புகளைக் கொல்வது நியாயமானது" என்றான். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றிவிட, தந்தை மகனைக் கொல்வதற்காக ஒரு தெய்வீக அத்திரத்தை எடுத்தார். முனிவர்கள் ஒடி வந்து தந்தை-மகன் சண்டையை நிறுத்தினார்கள். பாம்புகளும் இறந்த முனிவர்களை எழுப்பி விட்டன.
முடிவுரை
பறவைகள் ஜெய்மினி முனிவருக்கு மார்க்கண்டேய புராணத்தைச் சொல்லி முடித்தன. முனிவர் அப்பறவை களுக்கு நன்றி செலுத்திவிட்டுத் தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 25 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றான், தந்தை, வந்து, மனைவி, உயிரோடு, நான்