மார்க்கண்டேய புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
ஒருமுறை காலவன் என்ற பிராமணன் ஒர் அதிசயமான குதிரையை சத்ருஜித்துக்குப் பரிசளித்தான். அந்தக் குதிரை செல்லாத இடமே இல்லை. நான் வசிக்கும் ஆசிரமத்தில் தைத்திரியர்கள் பல மிருகங்களின் வடிவத்தினை ஏற்றுக் கொண்டு வந்து தொல்லை தருகின்றனர். அப்போது இந்தக் குதிரை ஆகாயத்தில் இருந்து வந்தது. இந்தக் குதிரையை வைத்துக் கொண்டு உன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள் என்று அசரீரி பிறந்தது. அதனால்தான் குதிரையை உங்களிடம் கொண்டு வந்தேன்’ என்று கூறினான் பிராமணன். இதைக் கேட்டு மகிழ்ந்த சத்ருஜித் தன் மகனை அழைத்து, அக் குதிரையை அவனுக்குப் பரிசளித்து, இந்த பிராமணனுக்கு இடையூறு செய்யும் தைத்திரியர்களை அழித்து வருவாயாக என்றான். ரிதத்துவஜா அந்த மாயக் குதிரையில் ஏறிக் கொண்டு அந்த பிராமணர் ஆசிரமத்தை அடைந்தான். தைத்திரியர்கள் பன்றி, புலி, சிங்கம் ஆகிய வடிவங்களில் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் வந்தனர். அனைவரையும் வீழ்த்திய அரசகுமாரன் ஒரே ஒரு பன்றி மட்டும் தப்பி ஒடுவதை அறிந்து, அதைத் துரத்திச் சென்றான். கடைசியாக அந்தப் பன்றி ஒரு பிலத்திற்குள் நுழைந்தது. அதனுள் சென்ற அரசகுமாரன் இருட்டாக இருந்த பகுதியைக் கடந்து புதிய உலகத்திற்கே வந்து விட்டான். அனைத்தும் பொன்னால் ஆன அரண்மனையில், யாரும் நடம்ாட்டமே இல்லாதிருப்பதைக் கண்டான். ஆனாலும் அழகே வடிவான ஒரு பெண் ஒரிடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளை யாரென்று கேட்க மதலசா என்ற அப்பெண், தான் விஷ்வவக என்ற கந்தர்வனின் மகள் என்றும், பாதாள கேது என்ற அசுரன் தன்னை இங்கே வைத்திருப்ப தாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவள் ஏற்பாடு செய்வதாகவும் கூறினாள். ரிதத்துவஜா அவளை மணக்க விரும்பினான். மணம் செய்து வைக்கும் ஆச்சாரியன் இல்லை ஆதலால், அப்பெண் தன் குருவான தும்புருவை வேண்டினாள். உடனே அவர் அங்குத் தோன்றி, இருவருக்கும் மணம் செய்வித்தார். மணமக்கள் அந்த இடத்தை விட்டுப் புறப்பட நினைக்கையில், பாதாள கேதுவும் அவன் துணைவர் களும் படையெடுத்து வந்து அரசகுமாரனைக் கொல்ல நினைத்தனர். துவஸ்திரா என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி தைத்திரியர்கள் அனைவரையும் அழித்தான். பிறகு அப் பெண்ணோடு தந்தையை வந்து வணங்கினான். அரசகுமாரன் இத்தனை சாகசச் செயல்களைச் செய்ய உதவியாக இருந்தது அந்த பிராமணன் கொடுத்த குதிரை. அக்குதிரையின் பெயர் 'குவலயா என்பதாகும். அக் குதிரையை ஒட்டும் அரசகுமாரன் 'குவலயஷ்வா என்று பெயர் பெற்றான்.
சில நாட்கள் கழித்து மன்னன் சத்ரஜித் தன் மகனை அழைத்து, "மகனே! நீ பகலில் ஒரு பகுதியில் உலகத்தைச் சுற்றி வந்து தவசிகளுக்குத் துன்பம் தரும் தானவர்களையும் தைத்திரியர்களையும் அழைத்து வருவாயாக!” என்று கட்டளை இட்டான். அன்று முதல் அரசகுமாரன் மதியம் வரை உலகைச் சுற்றி வந்து மாலைப் பொழுதில் தன் மனைவியாகிய மதலசாவுடன் பொழுதைக் கழித்து வந்தான். ஒருமுறை அவன் ஒரு போலி முனிவனைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் போலி முனிவன், அரசகுமாரனால் கொல்லப்பட்ட பாதாள கேதுவின் தம்பியாகிய தாலகேது. அவன் முனிவன் வேடத்தில் இருந்ததால், அரசகுமாரன் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தாலகேது அரசகுமாரனை அடையாளம் கண்டு கொண்டு பழிவாங்க முடிவு செய்தான். போலி முனிவர், “அரசே! நான் ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டும். அதற்குப் பொருள் இல்லை. தங்கள் கழுத்தில் இருக்கும் மணிமாலையைத் தந்தால் அதை வைத்து யாகம் செய்ய முடியும்” என்றார். அவன் வஞ்சனையை அறியாத அரசகுமாரன்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 10 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அரசகுமாரன், வந்து, குதிரையை, கொண்டு, அவன், அந்த, செய்ய, பன்றி, பாதாள, போலி, அழைத்து, இல்லை, தைத்திரியர்கள், பிராமணன், குதிரை