மார்க்கண்டேய புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க தரும தேவதை ஒரு சண்டாள வடிவம் கொண்டு வந்தது. தன்னையே விற்கத் துணிந்த அரிச்சந்திரனிடம் பேசி வாங்க முயன்றான் அந்தச் சண்டாளன். பழைமையில் ஊறிய அரிச்சந்திரன், ஒரு கூடித்திரியன் ஒரு சண்டாளனுக்கு அடிமை ஆவதை விரும்பாமல் இருந்தான். பொழுது செல்லச் செல்ல வேறு வழி இல்லாததால் சண்டாளனுக்குத் தன்னை விற்க முடிவு செய்தான். அந்த நிலையில் அங்கு வந்த விசுவாமித்திரர், சண்டாளனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடன் தீர்ந்தது என்று கூறிப் போனார்.
சண்டாளனுடன் சென்ற அரிச்சந்திரன் தனக்குரிய பணி யாது, ஊர் யாது என்பதை அறிந்து கொண்டான். பிணத்தைச் சுட வருகின்றவர்கள் கொடுக்கும் தொகையில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்குரியதாகும். அரைப் பங்கு சண்டாளனுக்கும், மூன்றில் ஒரு பங்கு அரிச்சந்திரனுக்கும் கொடுக்கப்படும். மி கக் கொடுமையானதும், பேய் பிசாசுகளின் உறைவிடம் ஆனதும், நரிகள் போன்றவற்றின் உறைவிடமும் ஆன அந்த மயானத்தில், அரிச்சந்திரன் பன்னிரண்டு மாதங்களைக் கழித்தான். ஒரு நாள் இன்னும் பன்னிரண்டு வருடங்கள் அங்கேயே இருந்த பிறகுதான் தனக்கு விடுதலை கிட்டும்' என்று கனவு கண்டான். இந்தக் கனவின் பயனாக மறுநாள் மனங்கலங்கி, தான் யார் என்பதைக் கூட மறந்து வாழத் தொடங்கினான். அந்த நிலையில் அவன் மகன் ரோஹித்வஷாவைப் பாம்பு கடித்துவிட அவன் உடலை எரிப்பதற்காக ஷைவ்வியா கொண்டு வந்தாள். மனங்கலங்கித் தன்னையே அறியாமல் இருந்த அரிச்சந்திரனுக்கு அது யாருடைய பிணம் என்றோ, அதைக் கொண்டு வந்தவள் யார் என்றோ தெரியவில்லை. வெகு நேரம் கழித்துத்தான் அவர்கள் யார் என்று அவனும், அவன் யார் என்று அவன் மனைவியும் அறிந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு 'ஒ' என்று கதறினர். மகனையும் இழந்த நிலையில் வாழப் பிடிக்காமல் அவர்கள் இருவரும் நெருப்பில் வீழ்ந்து உயிர் விடத் துணிந்தனர். அப்பொழுது இந்திரன், விசுவாமித்திரர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து அவனைத் தடுத்து அவன் மனைவி மக்களோடு இந்த உடம்போடு சொர்க்கம் போகலாம் என்று கூறி, ரோஹித்வஷாவின்மேல் அமிர்தம் தெளித்து உயிர் கொடுத்தார். அது கேட்ட அரிச்சந்திரன், “அரசனாக இருந்த நான், என் கீழ் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்வதுதான் முறை. சந்தர்ப்பம் கிடைத்தது என்பதற்காக நான் மட்டும் மோட்சம் போகத் தயாரில்லை!” என்று அவன் கூறியவுடன், இந்திரன் அவனைப் பார்த்து, “அரிச்சந்திரா! நீ கூறுவது சரியில்லை. ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங் களுக்கு ஏற்ப ஒருவர் சொர்க்கம் செல்ல முடிகிறது. எல்லா மக்களும் ஒரே அளவாகப் பாவ புண்ணியங்களைச் செய்ய வில்லை. ஆகவே, நீ நினைப்பது போல நடைபெறுவது கடினம்’ என்று கூறினார். உடனே அரிச்சந்திரன் தான் சேகரித்திருந்த புண்ணியத்தின் பெரும் பகுதியைத் தன் குடிமக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, மகன் ரோஹித்வஷாவை அரசனாக்கினான். வந்த விமானத்தில் தான் தன் மனைவியோடு சொர்க்கம் சென்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 6 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், அரிச்சந்திரன், கொண்டு, பங்கு, யார், விசுவாமித்திரர், இருந்த, தான், சொர்க்கம், அந்த, ஷைவ்வியா, மகன், நிலையில்