மார்க்கண்டேய புராணம் - பகுதி 20 - பதினெண் புராணங்கள்
இரண்டாவது மன்வந்திரமாகிய ஸ்வரோசிஷா மன்வந்திரத்தில், சரதா என்று ஒர் அரசன் ஆட்சி செய்து வந்தான். சிலகாலம் கழித்துப் பகை அரசர்கள் அவனைத் தோற்கடித்து அவன் நாட்டைக் கைப்பற்றினர். மன்னன் தோல்வி அடைய அவனுடைய அமைச்சர்களில் சில துரோகிகளும் காரணமாக இருந்தனர். எல்லாவற்றையும் இழந்த மன்னன் காட்டிற்கு வந்து மேத்தா என்ற முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தான். அங்கு தங்கி இருந்தாலும் ஒயாமல் தன் நாட்டையும் மக்களையும் நினைத்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் ஆசிரமத்திற்கு வெளியே வந்த பொழுது சமாதி என்ற வைசியனைச் சந்தித்தான். அவன் பெரிதும் வருந்தி இருந்ததால், நாட்டு மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று கேட்டான். தன்னுடைய மனைவி, பிள்ளைகளுமே தன் சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு தன்னை விரட்டி விட்டதை சமாதி சொல்லி அழுதான். இருவரும் சென்று முனிவர் மேத்தாவிடம் நடந்தவற்றைக் கூறி, ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று கேட்டார்கள். அவர்கள் துயரக் கதையைக் கேட்ட மேத்தா முனிவர், "இது மகாமாயையின் திருவிளையாடலால் நடைபெறுகின்ற செயல்களாகும். இவை அனைத்தும் மாயையே. அதைப் புரிந்து கொண்டால் இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை” என்று கூறிவிட்டு, மகா மாயையின் திருவிளையாடலை விளக்க, மேத்தா முனிவர் மது, கைடபர்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். "இரண்டாவது மன்வந்திரத்தில் எங்கும் நீராக இருந்த பொழுது, விஷ்ணு அந்த நீரில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது இரண்டு காதுகளில் இருந்தும் இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் திருமாலின் உந்தியில் இருந்த பிரம்மனைத் தாக்கினார்கள். நீண்ட போரில் அவரை வெல்ல முடியாத நிலையில் பிரம்மன் கண்களை மூடி மகாமாயையை தியானித்தார். உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவின் கண் இமைகளில் இருந்தும், வாயிலிருந்தும், புஜங்களிலிருந்தும் மகாமாயை வெளிப்பட்டாள். மகாமாயை வெளிப்பட்டதால், விஷ்ணுவே உறக்கத்தினின்று விழித்து விட்டார். நிலைமையைப் புரிந்து கொண்டு மது, கைடபர்களுடன்டதானே போர் புரியத் துவங்கினார். இந்தப் போர் ஐயாயிரம் ஆண்டுகள் நீடித்தது. இறுதியாக மகாமாயையின் சக்தியால் மது, கைடபர்கள் உள்ளத்தில் தாங்களே வெற்றி பெற்றது போல ஒரு மாயத் தோற்றம் உண்டானது. அதை நம்பி அவர்கள் எக்களிப்புடன் விஷ்ணுவைப் பார்த்து, “நாங்கள் இருவரும் உனக்கு ஒரு வரம் தருகிறோம். நீ எது கேட்டாலும் தருகிறோம்" என்றார்கள். உடனே விஷ்ணு, “நீங்கள் இருவரும் என் கையால் சாக வேண்டும்” என்றார். மது, கைடபர்கள் ஏற்கெனவே வாக்குக் கொடுத்துவிட்டபடியால், வேறு ஒன்றும் செய்ய முடியாமல் “நீ கேட்ட வரத்தைத் தருகிறோம். அதில் ஒரு சிறு வரையறை உள்ளது. தாங்கள் எங்களைக் கொல்வது, எங்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடியதுதான். ஆனால் தண்ணீர் இல்லா இடத்தில்தான் எங்களைக் கொல்ல வேண்டும்” என்றனர். உடனே விஷ்ணு அந்த அசுரர்களைத் தன் தொடைமீது வைத்துத் தன் சக்கரத்தினால் அவர்களைக் கொன்றார்.
மகிஷாசுர வதம்
மேத்தா முனிவர் அரசிழந்த சுரதாவுக்கும், வீடிழந்த சமாதிக்கும் மகிஷாசுரன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
முன்னொரு காலத்தில் புரந்தரன் என்பவன் இந்திரப் பதவி வகித்து வந்தான். மகிஷாசுரன் அசுரர் தலைவனாக இருந்தான். வழக்கம் போல் தேவாசுர யுத்தம் நூறு ஆண்டுகள் நடந்தன. அசுரர் கை ஓங்கியது. இந்திரர்களும் தேவர்களும் தேவருலகத்தில் இருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் பூவுலகைச் சுற்றித் திரிந்தார்கள்.
இந்திரனும், ஏனைய தேவர்களும் கூடி பிரம்மனிடத்தில் தங்கள் பரிதாப நிலையைக் கூறினர். தான் தனியே ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்த பிரம்மன், அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவனும் விஷ்ணுவும் இருக்குமிடம் சென்றார். நடந்ததைக் கேட்ட சிவனும் விஷ்ணுவும் பெருங் கோபம் அடைந்தனர். அப்போது, அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மாபெரும் ஆற்றல் வெளிப்பட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரிடம் இருந்தும் வெளிப்பட்ட ஆற்றல் களோடு, இந்திரன் முதலிய எட்டுத் திக்குபாலர்களிடமிருந்தும் ஆற்றல்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 20 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இருந்தும், விஷ்ணு, மேத்தா, முனிவர், பிரம்மன், ஆற்றல், கேட்ட, இருந்தான், கொண்டு, இருவரும், கைடபர்கள்