மார்க்கண்டேய புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்
ரிதவக் என்ற முனிவர் நீண்ட காலம் மகப்பேறு இல்லாமல் இருந்தார். ரேவதி நட்சத்திரத்தில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. எல்லாக் கெட்ட பழக்கங்களையும் பெற்ற அவன் தீயவனாக வாழ்ந்தான். இதனால் மனத்துயர் அடைந்த முனிவர் நோய்வாய்ப்பட்டார். அவர் மனைவி தொழுநோயால் பிடிக்கப்பட்டாள். இதன் காரணத்தை அறிய விரும்பிய ரிதவக் முனிவர், கார்க முனிவரை அடைந்து, "நான் நேர்மையானவன், தவம் செய்தவன். எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்துள்ளது. நான் செய்த பாவத்தினாலா அல்லது என் மனைவி செய்த பாவத்தினாலா, அல்லது குழந்தை செய்த பாவத்தினாலா? எதனால் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளது?’ என்றார். கார்க முனிவர், 'ரிதவக் முனிவரே! இப்பிள்ளை இப்படி இருப்பதற்கு நீங்கள் சொல்லிய எதுவும் காரணமன்று. அவன் பிறந்த பொழுது, விண்ணில் ஆட்சி செலுத்திய ரேவதி நட்சத்திரம்தான் அந்தக் கோளாறுக்குக் காரணம்” என்றார். அதைக் கேட்ட ரிதவக் முனிவர் "இப்படித் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரேவதி நட்சத்திரம், ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து விடட்டும்” என்று சபித்தார்.
அதிசயத்திலும் அதிசயம் அனைவரும் பார்த்துக் கொண் டிருக்கும் பொழுதே ரேவதி நட்சத்திரம் குமுத மலையின் மேல் விழுந்தது. அதனால் அம்மலையும், அதைச் சுற்றியுள்ள பிராந்தியமும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியது. இந்த இடத்தில் புதிய தாமரைக் குளங்கள் தோன்றலாயின. அதனால் அந்த இடம் ரைவதக என்று பெயர் பெற்றது. இந்தக் குளங்களில் உள்ள தாமரையில் இருந்து ரேவதி என்ற அழகான பெண் வெளிவந்தாள். பிரமுச்சா என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். அவள் மணப் பருவத்தை அடைந்தவுடன், அவளுக்கு ஏற்ற கணவனைத் தேட விரும்பினார் முனிவர். அக்னி தேவனை அழைத்து தன் மகளுக்கு ஏற்ற மணாளன் யார் என்று கேட்டார். "துர்கமா’ என்ற மன்னன் எல்லா விதத்திலும் ரேவதிக்கு ஏற்றவன்” என்று கூறினான், அக்னி. இது நடைபெற்ற சில நாட்கள் கழித்து துர்கமா என்ற மன்னனே வேட்டையாட வந்தான். பிரமுச்ச முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்தான். அவனைக் கண்ட முனிவர் தன் பெண்ணின் கதையைச் சொல்லி, அக்னி தேவன் கூறியதைச் சொன்னார். மன்னன் மணம் புரிய ஒப்புக் கொண்டான். ரேவதி ஒர் ஒப்பத்தக்க வரையறை விதித்தாள். அதன்படி கீழே விழுந்த ரேவதி நட்சத்திரம் பழையபடி ஆகாயத்தில் தன்னிடத்திற்குப் போகக் கூடுமேயானால் மணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறினாள். பிரமுச்ச முனிவர் தன் தவ வலிமையால் ரேவதியை ஆகாயத்திற்கு ஏற்றினார்.
துர்கம மன்னனைப் பார்த்து, மகளை மணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த மன்னன், “முதல் மனுவாகிய சுவயம்பு மனுவின் பரம்பரையில் வருகிறவன் நான். அடுத்த மனு என் மகனாகப் பிறக்க வேண்டும்" என்றான். அப்படியே ஆகட்டும்! என்றார் முனிவர்.
துர்கமாவுக்கும், ரேவதிக்கும் பிறந்த குழந்தை 'ரைவத' மனு என்ற பெயரைப் பெற்று உலகை ஆட்சி செய்தது. இந்த மனுவின் காலத்தில் இருந்த இந்திரனுக்கு ரிபு என்ற பெயர் இருந்தது.
ஆறாவது மனுவின் கதை
சக்ஷீசா என்ற பெயருடன் வாழ்ந்த ஆறாவது மனுவின் கதை. இந்த மனு பழம்பிறப்பில் பிரம்மாவின் கண்ணி லிருந்து தோன்றியதால், இவனுக்கு சக்ஷீசா என்று பெயர். (சக்ஷீ-கண்). அனமித்ர என்ற முனிவருக்கும், பத்ரா என்ற மனைவிக்கும் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜதீஸ்மரா சக்தி உண்டு. பத்ரா, குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். திடீரென்று குழந்தை சிரித்தது. ஆச்சரியப்பட்ட தாய் “ஏன் சிரிக்கிறாய்?” என்றாள். “சிரிக்காமல் என்ன செய்வது? பக்கத்தில் இருக்கும் பூனை சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைத் தின்னலாம் என்று பார்க்கிறது. ஜதஹர்ணி என்ற பெண் பிசாசும் சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைத் தின்னப் பார்க்கிறது. நீ மட்டும் என்ன? என்னைக் கொஞ்சுவதால் உனக்கு சந்தோஷம் உண்டாகிறது. நான் வளர்ந்தவுடன் தாய் என்ற முறையில், இது வேண்டும், அது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 18 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, முனிவர், ரேவதி, குழந்தை, மனுவின், ரிதவக், நான், பெயர், அக்னி, நட்சத்திரம், மன்னன், இப்படி, ", செய்த, பாவத்தினாலா, என்றார்