மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் பேரிசை நவிர மேஎ யுறையும் காரிஉண்டிக் கட வுள தியற்கையும் பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் |
85 |
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம்படக் கடந்து நூழி லாட்டிப் புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும் இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொட |
90 |
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின் வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும் கேளினி வேளைநீ முன்னிய திசையே |
அவன் நாட்டு நவிரமலை முதலானவற்றின் பெருமையினைச் சொல்கிறேன், கேளுங்கள். என்று சொல்லிக்கொண்டு நூலாசிரியர் கூறத் தொடங்குகிறார். வேளை (வேள் நன்னனை) நினைத்து நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அவன் நாட்டில் நவிரமலை இருந்தது. நஞ்சுண்ட சிவனின் கோயிலும் அங்கு இருந்தது. இதன் ஆற்றலை எண்ணி உலகம் அஞ்சிக் கிடந்த காலம் அது. இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழைக் கொண்டவன் நன்னன். அவனது முன்னோர் பின்பற்றிய நெறி பிறழாது இவனும் பகைவரை நூழிலாட்டி வென்ற தன் வீரர்களுக்குக் கொடை நல்கும் கடப்பாடு உடையவனாய் விளங்கினான். அவனது அரண்மனை மூதூரைச் சுற்றி மதிலும் அகழியும் இருந்தன. அதன் புகழைப் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு போர் வீரர்களை வள்ளுவர் வில்லேர் உழவர் என்கிறார். இந்நூலாசிரியர் கௌசிகனார் அவர்களை வேல்நிழல் புலவர் என்கிறார். கொடுந்தாள் முதலை - வளைந்த கால்களை உடைய முதலை இரையைத் தேடி வளைந்த காலை உடைய முதலைகள் கல்லில் ஏறும் நீரலை மோதும் ஆய்ந்த அகழி இருக்கும். அடுத்து மலை போல் வானளாவிய மதில் இருக்கும். அவன் மூதூரைப் பலரும் புகழ்கின்றனர். அந்தப்புகழ் அவர்களுக்குச் செல்வக் கிடக்கையாக மாறிவிட்டது. மேலும் அந்தப் புகழ்மாலையைக் கேட்டுக் கேட்டு அவ்வூர் மக்கள் வெறுத்துப்போய்விட்டனர். நன்னனைப் புலவர் ‘வேள்’ என்கிறார். வேள் என்னும் சொல் முருகனைக் குறிக்கும். முருகனைச் சேஎய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவன் சேய்நன்னன் எனக் குறிக்கிடப்படுகிறான். இவை இவனது பெயர் பற்றிய விளக்கங்கள்.
வழியினது நன்மையின் அளவு கூறுதல்
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் | 95 |
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே வானமின்னு வசிவு பொழிய ஆனாது இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப் பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து |
அவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது.
அகலிரு விசும்பி னாஅல் போல | 100 |
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை நீலத் தன்ன விதைப்புன மருங்கின் மகுளி பாயாது மலிதுளி தழாலின் அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற் கெளவை போகிய கருங்காய் பிடியேழ் |
105 |
நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண் பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக் கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல் விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும் குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவர |
110 |
மேதி யன்ன கல்பிறங்கு இயலின் வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே |
முசுண்டை - கறிசமைக்க உதவும் முசுண்டைக் கீரையின்கொடி ஆலமரம் போல வெண்ணிறப் பூக்களோடு விரிந்து கிடந்தது. எள் - வாய் விரிந்து வெடிக்காத எள்ளுக் காய்கள் கைப்பிடி அளவுக்குள் 7 காய்கள் என்னும்படி நெருக்கமாகக் காய்த்திருந்தன. அவை ஈரம் பட்டு எண்ணெய்க் கொழுப்பேறிக் கிடந்தன. காரணம் எள் பயிரிட்ட வயலில் மண்ணின் சத்தை உறிஞ்சி மண்வளத்தைக் கெடுக்கும் மகுளிச்செடி முளைப்பதில்லை. அதற்குக் காரணம் நல்ல மழை. ஆங்காங்கே நிலம் குழிந்து பள்ளம் பட்டுக் கிடக்கும் இடங்களில் நீர் தேங்கிய சுனைகள். தினைக்கதிர்கள் - யானைக்குட்டியின் கை போல வளைந்து காய்த்திருந்தன. அவரை – தினைத்தட்டையில் ஏறி வளைந்திருக்கும் கோளியவரை கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தது. அது ‘குளிர்’ என்னும் விளையாட்டுக் கருவி போலக் காணப்பட்டது. வரகு - எருமைகள் போல் ஆங்காங்கே பாறைகள். அடுத்திருந்த வழி மண்ணில் தென்னம் பாளைபோல் விரிந்து வரகு விளைந்திருந்தது.
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் |
115 |
வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக் காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக் குறையறை வாரா நிவப்பி னறையுற்று ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே புயற்புனிறு போகிய பூமலி புறவின் |
120 |
அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை |
ஐவன வெண்ணெல் – இது புழுதியில் விளையும் நெல். பால் பிடித்து விளைந்திருக்கும். காற்றை உள்ளே நுழைய விடுவதால் உதிராது. கரும்பு – வேல் நட்டதுபோல் நிற்கும். எனினும் காற்றால் வளைந்து சாயும் [இறைஞ்சும்]. அது வெட்டிக் கரும்பாலைக்குக் கொண்டுசெல்லும் விளைச்சலைப் பெற்றிருந்தது. துவரை [தோரை] – புயல்காற்று வீசி, [புனிறு போகி] மண் பூத்திருக்கும் முல்லைநிலத்தில் அவல் போலப் பொதிவு கொண்டு, பதமாக விளைந்திருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, அவன், இலக்கியங்கள், மலைபடுகடாம், என்கிறார், பத்துப்பாட்டு, விரிந்து, யன்ன, கொண்டன, தன்ன, முசுண்டை, போகிய, காரணம், வரகு, வெண்ணெல், விளைந்திருக்கும், வளைந்து, ஆங்காங்கே, காய்த்திருந்தன, வாலிதின், காய்கள், இருக்கும், அவனது, பலரும், நாட்டில், வேள், சங்க, நவிரமலை, கேட்டுக், கேட்டு, போல், என்னும், உடைய, வளைந்த, புலவர், முதலை, அந்த