மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல்
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக் குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல் |
540 |
இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப இடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக் கொடைக்கட னிறுத்த செம்ம லோயென |
கொடைக்கடன் தீர்க்கும் செம்மலோய் – என்று பாடும்போது … விருந்திற்பாணி - அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குவதற்கு முன் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய பண்ணிசைப் பாடல்களைப் பாடுங்கள். பின்னர் நன்னனை வாழ்த்துங்கள். உலகில் அழியாத புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அரசர்கள் பலரின் வழிவந்தவன் நீ என்றாலும், அவர்களுக்குள் நீ யானை போன்றவன். வல்லவர்களிடையே வறுமையில் வாடும் நல்லவர் யார் என்று தெரிந்துணரும் பெரியோர்கள் பலர் இன்று இந்த உலகத்தில் வாழ்வு முடிந்து உலகின் பொது நியதியாகிய இறப்பைத் தழுவி நிற்கிறார்களே என்று எண்ணி கொடைக் கடமையை நீயே எடுத்துக்கொண்டு செம்மாந்து நிற்கும் செம்மலோய் ! என்றெல்லாம் நீங்கள் அவனைப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே, …
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச் சென்றது நொடியவும் விடாஅன் |
545 |
நன்னன் கூறும் முகமன் உரை
நசைதர வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப் |
நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்
பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி கல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ |
வந்ததே போதும் – என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான். சுற்றத்தாரின் வலப்புறம்- மேலே சொன்னவாறெல்லாம் நன்னனின் வெற்றிப் புகழை அவனது பெருமையோடு சேர்த்துப் பாடுங்கள். நீங்கள் அவனிடம் எதற்காகச் சென்றீர்கள் என்று சொல்வதற்கு முன்னரே அவன் உங்களின் கருத்தை அறிந்தவனாகப் பேசத் தொடங்கி விடுவான். நீங்கள் என்னிடம் வந்ததே போதும். உங்கள் வருத்தம் பெரிது என நான் அறிவேன். – என்பான். போரிட வந்த எதிரிகளை எதிர்கொள்ளப் போர்வீரர்களோடு சென்ற அவன் தன் அரண்மனை முற்றத்தில் தங்கச் செய்வதற்காகத் தன் சுற்றத்தாரை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்படைப்பான். உங்களை அவர்களுக்கு வலப்புறம் இருக்கச் செய்வான்.
நன்னனது குளிர்ந்த நோக்கம்
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து | 550 |
அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து இலமென மலர்ந்த கைய ராகித் தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக் கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று |
555 |
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே |
தம் பெயரைத் தம்மோடு கொண்டுசென்ற மக்கள் சேயாற்று மணலைக்காட்டிலும் பலர். நன்னன் சேயாற்று வெள்ளம் போலப் பயன்படுபவன். பல அரசர்கள் உயர்ந்த அரியணையில் வீற்றிருப்பர். தம்மோடு உருமுதல் இல்லாத உரிமைச் சுற்றத்தோடு வீற்றிருப்பர். மிக விரிவான ஆட்சிப் பரப்பைக் கொண்டிருப்பர். ஆனால் அவர்களது அறிவு நுட்பம் சுருங்கியதாக இருக்கும். இல்லை இல்லை என்று சொல்லி எப்போதும் கையேந்திக் கொண்டும், இருப்பதைக் கூடத் தராமல் கையை விரித்துக் கொண்டும் வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் நன்னன் நாட்டில் ஓடும் சேயாற்று மணலின் எண்ணிக்கையைவிட மிகுதியானவர்கள். சேயாற்று வெள்ளம் உயர்ந்த மலைகளிலிருந்து இறங்கி வரும். வயல்களில் பாய்ந்து கலங்கலாகி மீண்டும் ஆற்றில் விழும். இப்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும். (நன்னன் சேயாற்று வெள்ளம் போன்றவன் – என்பது கருத்து.)
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப் பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிது உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி |
560 |
நன்னன் ஆற்று மணலைப்போல் மாய விரும்பாதவன். ஆற்று வெள்ளம் போல் வாழ விரும்புபவன். தனக்கென்று வரையறுக்கப்பட்ட நாள்கள் புகழோடு கழியட்டும் என்று விரும்புபவன். அதுதான் பரந்து கிடக்கும் வானம் போன்று விரிந்து கிடக்கும் உள்ளம். நீங்கள் அவனை நயந்து செல்கிறீர்கள். அவனோ உங்களைக் காட்டிலும் உவந்த உள்ளம் கொண்டவனாய் ஆசையோடு உங்களைப் பார்த்து வரவேற்பான். அதுதான் விசும்பு தோய் உள்ளம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, சேயாற்று, நன்னன், வெள்ளம், இலக்கியங்கள், நீங்கள், சென்ற, உயர்ந்த, மலைபடுகடாம், பத்துப்பாட்டு, உள்ளம், இருக்கும், வீற்றிருப்பர், தம்மோடு, உவந்த, அதுதான், கிடக்கும், விரும்புபவன், ஆற்று, கொண்டும், இல்லை, சொல்லி, புகழை, அரசர்கள், பாடுங்கள், உங்கள், சங்க, செம்மலோய், போன்றவன், பலர், வலப்புறம், அவன், போதும், வந்ததே, அழைத்துச், உங்களை