மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
தவாப் பெருக்கத் தறா யாணர | 210 |
அழித் தானாக் கொழுந் திற்றி இழித் தானாப் பல சொன்றி உண் டானாக் கூர் நறவில் தின் றானா இன வைக னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் |
215 |
பயனற வறியா வளங்கெழு திருநகர் நரம்பின் முரலு நயம்வரு முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப் பாணர் உவப்ப களிறுபல தரீஇக் கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ |
220 |
மறங் கலங்கத் தலைச் சென்று வாளுழந் ததன் தாள் வாழ்த்தி நா ளீண்டிய நல் லகவர்க்குத் தே ரோடு மா சிதறிச் |
வெறுக்கை என்பது ‘போதும் போதும்’ என்று வெறுக்கத் தக்க அளவில் பெருகியுள்ள செல்வம். ஆனா = அமையாத. யாணர் =புதுப்புது வருவாய். குறையவே குறையாத செல்வம். புதுப்புது வருவாய். தின்றழிக்க முடியாத புலால் உணவு. அள்ள அள்ளக் குறையாத பெருஞ்சோறு. உண்டு மாளாத கள். இவற்றைத் தின்று மாளாத காலைப்பொழுது. பயன்படுத்த முடியாமல் நிலத்திலேயே கொட்டிக் கிடக்கும் வெறுக்கத் தக்க செல்வம். எதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் செல்வ வளம் செழித்துக் கிடக்கும் அரண்மனை. யாழ் மீட்டும் விறலியர் கைகளுக்கு வளையல். பாணர்களுக்கு யானைகள். அதிகாலையில் அவைக்கு வந்து அரசனை வாழ்த்தும் அகவர்களுக்கு குதிரை பூட்டிய தேர். அகவர் = ’ஜே’ போடுவோர் என்றெல்லாம் பரிசுகளை நெடுஞ்செழியன் வழங்கினான். நண்பர்கள் மகிழும்படி வென்று கொண்டுவந்தனவற்றை வழங்கினான்.
சூ டுற்ற சுடர்ப் பூவின் | 225 |
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின் விழுமிய பெரியோர் சுற்ற மாகக் கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப் பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார |
230 |
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப் படுகண் முரசங் காலை யியம்ப வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர் கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த் |
235 |
திரையிடு மணலினும் பலரே உரைசெல மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே |
விழுமிய பெரியோர் உன் சுற்றம். அவர்கள் நீ சூட்டிய விருதுப் பூவை அணிந்தவர்கள். அவர்களின் மார்பில் உள்ள சந்தனம் பெருமையால் புலர்ந்துள்ளது. அவர்களும் நீயும் பையில் கொண்டுவந்த கள்ளைக் கலத்தில் வாங்கி உண்டு மகிழ்கிறீர்கள். உன்னைப் பணிந்த அரசர்கள் இப்படிச் சுற்றமாக வாழ்கிறார்கள். உன்னைப் பணியாதவர்களின் பாசறைகளைக் கடந்து நீ வென்றாய். பருந்துகளும் பறக்க முடியாத பாசறைகளில் காலை வேளையில் முரசு முழக்கி வென்றாய். இப்படி உன்னைப் பணிந்தும் பணியாமலும் உலகை ஆண்டு கழிந்த மன்னர் கடற்கரை மணலினும் பலர். அதனால் …
மருத நில வளப்பம்
வலைஞர் இயல்பு
வலைஞர் இயல்பு
அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி இரவு மெல்லையும் விளிவிட னறியாது அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் |
240 |
கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக் கழைவளர் சாரற் களிற்றின நடுங்க வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது |
புகழோடு பெருவாழ்வு வாழ்ந்த அரசர்கள் பலர் மாண்டொழிந்தனர். அதனால் நீ உன்னை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். மேகங்கள் கிழக்கிலுள்ள கடலில் நீரை முகந்துகொண்டு சென்று மேற்கிலுள்ள கடலை முற்றுகையிட்டன. அதனால் குளிர்ந்து கொட்டும் இடம் தெரியாததால் தாழ்ந்த நிலப் பரப்பிலும், உயர்ந்த மலைப் பரப்பிலும் மழையைக் கொட்டின. அதனால் கவலை என்னும் மலைப்பிளவுப் பகுதிகளில் அருவி ஓடி ஒலித்தது. மழை மிகுதியால் மூங்கில் காடுகளில் மேய்ந்த யானைக்கூட்டம் நடுங்கிற்று. வானத்தில் முழங்கும் இடி மலைமுகடுகளில் மோதி எதிரொலித்தது.
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி | 245 |
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக் களிறு மாய்க்குங் கதிர்க் கழனி ஒளி றிலஞ்சி அடை நிவந்த முட் டாள சுடர்த் தாமரை கட் கமழு நறு நெய்தல் |
250 |
வள் ளிதழ் அவிழ் நீலம் மெல் லிலை யரி யாம்பலொடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக் |
கீழைக் கடலுக்குச் செல்லும் செந்தண்ணீர் வெள்ளத்தைத் தடுத்துக் குளங்களில் பாயச் செய்தனர். அதனால் விளைந்த கதிர்மணிகளை யானை தின்று மாய்ப்பதைப் பற்றி உழவர் பொருட்படுத்தாத அளவுக்கு விளைச்சல் பெருகிற்று. குளத்திலிருந்து பாயும் நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது இலஞ்சி. இலஞ்சிகளில் தாமரை, நெய்தல், நீலம், ஆம்பல் முதலான பூக்கள் வண்டுகள் மொய்க்கப் பூத்து மணம் பரப்பின.
கம்புட் சேவல் இன்றுயில் இரிய வள்ளை நீக்கி வயமீன் முகந்து |
255 |
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டுக் கரும்பி னெந்திரங் கட்பி னோதை |
மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங் கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப |
260 |
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்கை வினைஞர் அரிபறை யின்குரல் தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற் கவிகொள் சும்மை யொலிகொ ளாயந் ததைந்த கோதை தாரொடு பொலியப் |
265 |
புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும் அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக் குருகு நரல மனை மரத்தான் மீன் சீவும் பாண் சேரியொடு மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச |
270 |
தாமரைப் பூக்களில் காடைக்குருவி தன் சேவலோடு உறங்கியது. அங்குப் படர்ந்திருந்த வள்ளைக் கொடிகளை ஒதுக்கிவிட்டு வலை போட்டதில் கிட்டிய பெரிய பெரிய மீன்களை வலைமீனவர் விலை சொல்லிக் கூவினர். நூழில் என்பது கரும்பாலை. வயலில் விளைந்த கரும்பை நூழில் எந்திரம் நெரிக்கும் ஓசை முழக்கம் கேட்டது. கரும்பின் வெல்லக் கட்டியை ஏற்றிச் செல்லும்போது சேற்றில் மாட்டிக் கொண்ட வண்டிச் சக்கரத்தைத் தூக்கி விட்டுக் கொண்டு உழவர் காளைகளை அதட்டி ஓட்டும் ஓசை கேட்டது. மாலைக்குப் பயன்படும் பகன்றை வயல்வெளியில் தழைத்திருந்தது. தொழிலாளர் அதனை அரிக்கும்போது முழக்கும் பறையின் ஒலி கேட்டது. திருப்பரங்குன்றத்தில் மழை பொழியும் ஓசை கேட்டது. மழை பொழியும் மகிழ்ச்சியால் மக்கள் செய்த ஆரவார ஒலி கேட்டது. பகன்றை மாலை சூடிக்கொண்டு மக்கள் கை கோத்து ஆடும் குரவை, தோள் தழுவி ஆடும் துணங்கை ஆகியவற்றின் பாட்டோசை கேட்டது. இந்த ஓசைகள் வானளாவ முழங்கியதால் எங்கும் இனிய ஓசையே எதிரொலித்தது. மீன் தேடும் குருகுகள் நீர்ப் பரப்புகளுக்குச் செல்லாமல் மீன் சீவும் வீட்டு முற்றத்திலிருந்த மரத்தில் அமர்ந்து இரை தேடலாயின.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, கேட்டது, அதனால், இலக்கியங்கள், உன்னைப், மீன், மதுரைக்காஞ்சி, விளைந்த, செல்வம், பகன்றை, பத்துப்பாட்டு, பலர், பரப்பிலும், எதிரொலித்தது, கழனி, அருவி, வலைஞர், ஆடும், தாமரை, மருத, நெய்தல், பொழியும், நூழில், சீவும், ஓசைகள், உழவர், நீலம், மக்கள், பெரிய, மணலினும், தக்க, புதுப்புது, வருவாய், குறையாத, வெறுக்கத், என்பது, சங்க, ஆண்டு, விறலியர், சென்று, முடியாத, உண்டு, காலை, கடந்து, மன்னர், அரசர்கள், விழுமிய, வழங்கினான், மாளாத, தின்று, கிடக்கும், வென்றாய்