சூடாமணி நிகண்டு - நகரயெதுகை
124(1) | இந்தன மிசையே காட்டம் எரி யிடு கனலுமாகும்
சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம் கந்த மிந்திரியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள். |
125(2) | அந்திலாங் கசையிடப் பேர் அணவலே அணுகல் புல்லல்
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் யிசைப்புமப்பேர் நந்தியே சிவனு ேமுறும் நந்தி யீச்சுரனு முப்பேர் உந்தி தேருருளே யாறே உவரி நீர் சுழியே கொப்பூழ். |
126 (3) | கந்து பண்டியுளிரும்புங் கம்பமும் யாக்கைமூட்டும்
கந்துகங் குதிரை பந்தாங் கன மென்ப புயல் பாரப் பேர் பந்து கந்துகமு மட்டுப்படர்நீர்தூந்துருத்தியும் பேர் குந்தள மாதரோதி குழற்கொத்து குருளை முப்பேர். |
127 (4) | வேந்தனே அரசன் திங்கள் வியாழ னிந்திர னாதித்தன்
காந்தார மிசை காடென்ப காழகங் கருமை தூசாம் ஏந்தலே பெருமை மேடா மெஃ குருக்கொடு வேல் கூர்மை கூந்தல் பெண் மயிர் பீலிப்பேர் குவலயங் குவளை பூமி. |
128 (5) | அந்தரம் முடிவு பேதம் அண்டமோடிடை நாற்பேரே
கந்தரமென்ப மேகங் கழுத்தொடு மலை முழைப்பேர் மந்தாரந் தரு மரஞ் செவ்வரத்தமு மாகுமென்ப சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை. |
129 (6) | கந்தருவம் பண்வாசி கவந்த மென்பது நீர் மட்டை
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல் செந்துவோர் நரக மோரி சீவனோ டணுவு நாற்பேர் சிந்து நீர் முச்சீ ராறு கடல் குற ளொறுதேசப்பேர். |
130 (7) | அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை
நந்தென்ப நத்தை சங்கா நாறுதல் மணமுண்டாதல் மைந்தனே திறலோன் சேயாம் வசந்தமே வேனில் வாசம் வந்தியர் புகழ்வோர் பேரு மலடிகள் பேருமாமே. |
131 (8) | விந்தமோ ரெண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பாம்
அந்தணர் அறவோர் பார்ப்பர் அணி படை வகுப் பணிப்பேர் அந்தகன் குருடன் கூற்றாம் அங்காரகன் றீச்செவ்வாய் மந்தகன் சனி கூர்ப்பில்லாமனுடனு மிருபேராமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நகரயெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்