சூடாமணி நிகண்டு - சகரயெதுகை
25 (1) | பாசனம் மென்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும்
வாசமே யிருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசாம் கோசமே மதிலுருப் பாண்குறி முட்டை முறை பண்டாரம் தேசிகன் வணிகன் றேசாந்திரியொடு குருவுமாமே. |
26 (2) | மூசல் மொய்த்திடல் சாவென்ப முடலையே திரட்சி யுண்டை
கீசகங் குரங்கு வேயாங் கேழ் நிறமொளி யொப்பாகும் வீசலேயெறிதலீவாம் வெம்மை யுட்டணம் விருப்பம் கேசர மகிழ்பூந்தாதாங் கிருட்டியொ ரீற்றாப் பன்றி. |
27 (3) | அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர்
நிசி யிரா மஞ்சள் பொன்னாம் நீர் புனல் குணம் பூராடம் பிசியென்ப பொய்யும் சோறும் பேசரும் பொருளு முப்பேர் சுசி கோடைசுத்தந் தீயாஞ் சுடர் விளக் கிரவி யங்கி. |
28 (4) | ஆசென்ப விரைவு குற்றம் அற்ப மெய்க்கவச நாற்பேர்
காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணி முப்பேரே ஆசினி பலாவிசேடம் மரவுரி மரக்காழ் விண்ணாம் தேசிக மழகு காந்தி திசைச்சொல் லோர்கூத்துச் செம்பொன். |
29 (5) | பச்சையே மரகதம் தோல் பரிமளப் புதல் மால் புந்தி
கச்சை யென்பது தழும்பு கயிறொடு கவச முப்பேர் செச்சைமை வெட்சி தேய் வைதிகையென்ப திசை சுணங்காம் மிச்சையே பொய்த்தாலாகு மிடித்தலஞ் ஞானமுப்பேர். |
30 (6) | பிச்ச மாண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும்
கச்சம் யானைக்கழுத்திற் கய றளவொடு மரக்கால் எச்சமே குறை சேயாக மிகமென்ப மரக்கோடி யானை அச்சமே யகத்தியைம் மை யஞ்சலிம்முப் பேராமே. |
31 (7) | ஆசையே திசை பொன் அன்பாம் ஆகுலம் வருத்த மோசை
காசையே காயா நாணல் காமர் தா னழகு காதல் பாசமே கயிறு கூளி பக ரூசித்துளை அன்பாகும் தூசென்ப தாடை யானைப் புரசை தூசிப்படைப் பேர். |
32 (8) | தாசியே பரணி சூளை தளியென்பது துளியே கோயில்
வேசரி கழுதையே கோவேறு வேசரி யுமாகும் ஆசுகம் பகழி காற்றாம் அந்தரி யுமையே துர்க்கை கோசிகஞ் சாம வேதங் கூறு பட்டாடைக்கும் பேர். |
33 (9) | பசுவேறு சீவனாவாம் பாரதி வாணி தோணி
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களுந் தீயு நாற்பேர் அச மூவாண்டுறு நெல் லாடாம் அணை யென்ப கரையே மெத்தை சசி யென்ப கர்ப்பூரஞ் சந்திர னயிராணி முப்பேர். |
34 (10) | விசும்பு பொன் னுலகு மேகம் விண்ணொடு திசையு நாற்பேர்
தசும்பு நற்குட மிடாவாஞ் சாத்தனே அருகன் ஐயன் இசை புகழ் கிளவி பாட்டாம் ஏங்கலே யொலி யிரங்கல் பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசு முப்பேர். |
35 (11) | வச்சிரங் சதுரக்கள்ளி வைரமே குலிச முப்பேர்
நொச்சியே சிந்து வார மதில் சிற்றூர் நுவலலாமே தச்சனே சித்திரைப்பேர் தபதி யென்றானுமாகும் உச்சி நண்பகலுச் சிப்பேர் உறுப் பவயவ முடம்பாம். |
36 (12) | பாசென்ப பசுமை மூங்கில் பப்பென்ப பரப்போ டொப்பாம்
மாசென்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே கேசம் பெண்மயிற்கும் ஆண்பாற் மயிற்குங் கிளத்தலாகும் வாசியே குழன் முன்னா ண்மா வாசி யென் னேவ னாற்பேர். |
37 (13) | மிசையென்ப துணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர்
விசயமே வென்றி வெல்லம் வெங்கதிர் மண்டலப்பேர் முசலியே யுடும்பு தாழை முந்திய ராம னோந்தி வசதி நல்லிட மூர் வீடாம் வர னயன் பரமன் காந்தன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சகரயெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்