சூடாமணி நிகண்டு - ஙகரயெதுகை
20 (1) | புங்கமே யுயர்ச்சி யம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே
திங்க ளம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன் கங்கென்ப வரம்பின் பக்கங் கருந்தினை பருந்து மாமே தொங்கலே பீலிக்குஞ்சந் தூக்கொடு தொடுத்த மாலை. |
21 (2) | சங்கமே கணைக்கா லோரெண் சபை சங்கு புலவர் நெற்றி
பங்கென்ப முடமேயாகும் பாதியுஞ் சனியு மேற்கும் வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயமாமே அங்கணஞ் சேறு முற்றம் ஆஞ் சலதாரேக்கும் பேர். |
22 (3) | ஞாங்கர் வேல் பக்க முன்பு மேலென நான்குமாகும்
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் வாங்கலே வளைத்தல் கொள்ளல் வையென்ப கூர்மை வைக்கோல் வேங்கைபொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூப்புள் சாவாம். |
23 (4) | மங்குல் காரிருள் விண் முப்பேர் மருந் தமுதொடு மருந்தாம்
பங்கியே பிறமயிற்கும் பகருமாண் மயிற்கும் பேராம் அங்கதம் பன்னகந் தோள் அணியுடன் வசைச் சொல்லாகும் பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே. |
24 (5) | அங்கமே யுடலுறுப் பென் பாறங்கங் கட்டி லைம்பேர்
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசலாகும் பொங்கரே மரத்தின் கோடு பொருப் புய ரிலவு முப்பேர் பொங்கலே கொதித்தல் மிக்காம் பொச்சாப்பு மறவி தீதாம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஙகரயெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்