சூடாமணி நிகண்டு - ழகரயெதுகை
247 (1) | விழவென்ப மிதுன ராசி விளங்கு முற்சவமு மாகும்
கழையென்ப புனர்தம் மூங்கில் கரும்பென விரும்பு முப்பேர் கழல் கழங்கொடு செருப்புக் காலணி காலந் நாற்பேர் கிழமை மூப் புரிமை பண்பாங் கிழி நிதிப்பொதி கீறாமே. |
248 (2) | சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும்
பாழியே வலி விலங்கின் படுக்கை யூர் பற்றிலாரூர் நாழியே யளக்கு நாழி நாழிகை பூரட்டாதி ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம். |
249 (3) | இழு மெனலோசையென்ப இனிமை யுமியம்பு மப்பேர்
விழுமமே சிறப்பு சீர்மை யிடும்பையும் விதித்த பேரே தொழுவென்ப துழலை தானே யிரேவதி நாளுஞ் சொல்லும் செழுமையே வளங் கொழுப்பாந் தேனென்ப நறவும் வண்டும். |
250 (4) | கழுது பேய் பரண் வண்டென்ப கயவு கீழ் பெருமை மென்மை
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே யிரங்கல் கேடாம் கழுமல் பற்றொடு மயக்கங் காதலே ஆசை கோறல் கழிலென்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர். |
251 (5) | மாழை பொன்னு லோகக் கட்டி மடமை யோர் புளிமா வோலை
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம்படையுறுப்பாம் தாழை கேதகை தெங்காகுஞ் சாகினி சேம்பு கீரை ஊழ் முறை வெயில் பகைப்போ ஊசியே சூசி யாணி. |
252 (6) | உழையென்ப திடமான் யாழி னோர் நரம்பிற்கும் பேராம்
குழை யென்ப தளிர் துவாரங் குண்டலஞ் சேறு நாற்பேர் விழைவென்ப புணர்ச்சி காதல் வெறுக்கை யென்பது பொன் செல்வம் வழி மர பிடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை யுலாவல் |
253 (7) | ஈழம் பொன் கள் ளோர்தேசம் எல்லையே அளவை வெய்யோன்
மேழகங் கவசம்ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை காழியர் வண்ணா ருப்புவாணிகர் இருபேர் காட்டும் வேழமே கரும்பி யானை கொறுக்கைச் சிவேணு நாற்பேர். |
254 (8) | கூழென்ப துணவும்பொன்னும் பயிரென்று கூறுமுப்பேர்
காழென்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் யாழென்ப மிதுனம் வீணை யிரலைநா ளாதிரைப் பேர் கீழென்ப திடங் கீழ்சாதி கீழ் திசை கயமை நாற்பேர். |
255 (9) | கோழியே குரு கோரூராங் குய்யமே மறைவு யோனி
மூழியே வாவி சேறோ டகப்பையு மொழியு முப்பேர் மூழையே யகப்பை சோறா முறஞ் சுளகொடு விசாகம் நூழிலே கோறல் யானை நுண்கொடிக்கொத்தான் பேர். |
256 (10) | தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிறை யடிமைக்கூட்டம்
கெழுவுதல் மயக்கம் பற்றாங் கீலாலங் கறை நீர் காடி குழ றுளையுடைப்பொருட் பேர் மயி ரிசைக்குழன் முப்பேரே அழிவென்ப வீதல் கேடாம் அவி நெய் சோ றமரருண்டி. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ழகரயெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்