சூடாமணி நிகண்டு - வகரவெதுகை
229 (1) | நவமென்ப புதுமை கேண்மை யொன்பது நற்கார்காலம்
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம் உவணமே கலுழனாகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும்பேர் பவணமே யிராசி பூமி படர்காற்று மனையே கோயில். |
230 (2) | புவன நீர் புவிய மாகும் புரத்தலே காத்தல் வன்மை
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமுந் தந்தும் தவவென்வ மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர் சிவ நன்மை குறுணி முத்தே சீவனே யுயிர் வியாழன். |
231 (3) | இவறலே மறவி யாசையென்ப பேரிச்சைக்கும் பேர்
இவர்தலே யெழுச்சி யாசை யேறுதல் சேரல் மேவல் சுவவென்ப புள்ளின்மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்டனும் பேர் குவவென்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர். |
232 (4) | தவிசென்ப தடுக்கு மெத்தை யிலகட முப்பேர் தானே
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி நவிரமே மஞ்ஞை புன்மை நன்மலையுடனே யுச்சி நவிலல் சொல்லுதல் பண்ணற்பேர் நவியமே மழு கோடாலி. |
233 (5) | கவுசிகம் விளக்குத்தண் டோர்பண் பட்டுக் கடியகோட்டான்
சவுரியே திருமால் கள்வன் சனி யம னினைய நாற்பேர் மவுலியே முடி கோடீரம் வட்கலென்பது நாண் கேடாம் கவலை செந்தினையோர்வல்லி கவர்வழி துன்ப நாற்பேர். |
234 (6) | சேவகம் வீரம் யானைதுயிலிடந் துயிலுஞ் செப்பும்
சீவணியோர் மருந்து செவ்வழித்திறத்தோரோசை ஆவணம் புணர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர். நீவியே துடைத்த லாடை நெருங்கு கொய்சக முப்பேரே. |
235 (7) | உவளக மதி லோர்பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில்
கவடென்ப கப்பி யானைக்கழுத்திடுபுரசைக்கும் பேர் சிவை யுமை மரவேர் கொல்லனுலைமுகந் திரியும்ஓரி கவையே ஆயிலியங் காடு கவர்வழி எள்ளிலங்காய். |
236 (8) | சிவப்பென்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர்
உவப்பென்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி யாசாரம் தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலு மொலியுஞ் செப்பும் துவக்கே தோல் பிணக்கிரண்டாஞ் சூழலே யிடம் விசாரம். |
237 (9) | சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே
கேவலந் தனிமை முத்தி கீரமென்பது பால் கிள்ளை பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே வாவலுஞ் சலிகைப்புள்ளுந் தாவலும் வகுக்கலாமே. |
238 (10) | சுவல் பிடர் தோண்மேன் மேடு துரகதக் குசை நாற்பேரே
கவி மந்தி புலவன் சுங்கன் கழி யென்ப மிகுதி காயல் நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரங் கலப்பை கவிகையே குடை கொடைப்பேர் கடிப்பங் காதணி பூண் செப்பாம். |
239 (11) | மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல்
காவுறுவிலங்கு செல்வங் கருநிறங் கமலை பத்தாம் கோ விழி பசு நீர் திக்குக் குலிசம் விண் கிரணம் பூமி ஏ வுரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற் பீரேழாமே. |
240 (12) | ஆவியே வாவி நாற்றம் ஆருயிர் புகை மூச்சைம்பேர்
கூவிரந் தேர் தேர்மொட்டாந் குவடு நீண்மலை வெற்புச்சி காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளு முப்பேர் நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளுமாமே. |
241 (13) | ஆவென்ப திரக்கம் பெற்றம் ஆச்சாவோ டிசை வியப்பாம்
காவென்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோட்சுமை நாற்பேரே பாவென்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பு மாகும் தாவென்ப பகை வருத்தந் தாண்டுதல் வலி கே டைம்பேர். |
242 (14) | கவ்வையே பழிச்சொல் துன்பங்கள் ளொல்ி யெள்ளிலங்காய்
பவ்வமே குமிழி வாரி பருமரக்கணு உவாவாம் தவ்வை முன்பிறந்தாளொடு தாயு மூதேவியும் பேர் நவ்வியே தோணி மானா நன் றென்ப பெருமை நன்மை. |
243 (15) | அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை யாகு முப்பேர்
செவிலியே வளர்த்தகைத்தாய் முன்பிறந்தவளுஞ் செப்பும் கவுட மோர்கொடி யோர்தேச மிருபெயர் கழறலாமே சுவடு வச்சிராங்கி யோரெண் சுபமென்ப தழகு வெண்மை. |
244 (16) | பவமென்ப சனனம் பாவம் பாவந்தான் வினை தியானம்
சவுரியங் களவு வீரந் தண்மை தான் குளிச்சி தாழ்வு யவமொரு தானியப் பேரென்ப நெல்லிற்கு மப்பேர் யவனர் சோனகர் கண்ணாளர் சித்திர காரர் ரென்ப. |
245 (17) | ஆவரணந்தான் சட்டை தடை மறைப் பாரணம் ஆடை
ஏவலே வியங்கோளென்ப எய்திய வருமைக்கும் பேர் ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரக்காரரும் பேர் ஓ விரக்கச்சொல் நீக்கமோடு நீர்தகை கபாடம். |
246 (18) | அவ்வையே தாயின் பேருமௌவையோ டிருபேராமே
செவ்வி யேர் பொழுதினோடு செப்பிய பருவ மாகும் தெவ் வமர் பகை யிரண்டாந் தீவினை கொடுமை பாவம் சைவமோர் புராண மீசன் சமயத்தின் விகற்பமாமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகரவெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்