சூடாமணி நிகண்டு - லகரவெதுகை
206 (1) | புலவர் பாடுநரே கூத்தர் புத னும்பர் கவிகள் ஓவர்
வலவனே வெற்றியாளன் மருவுந் தேர்ப்பாகன் மாயோன் அலகு நெற்கதிரே யாதி பலகரை நுளம்பு எண் ஏதி அலரி கண்வரி யருக்கன் அழ கொருமரம் பூவாமே. |
207 (2) | ஆலமே வடவிருக்க மடுநஞ்சோ டலர்பூ நீராம்
மூலம் வேர் முதலே யேது முதிர்வுறுகிழங் கோர்நாளாம் சீலமே குணந் தண்டித்தல் திகழ்சரித்திர முப்பேரே சாலமே வலை சாலே கமராமரஞ் சபை மதிற் பேர். |
208 (3) | காலம் வைகறை காலப்பேர் கல மலம் யாழ் பூ ணாவாய்
சாலகங் காலதர்ப்பேர் தானே பூமொட்டாகும் தால முண்கலமே நாவே தராதரமே பனையே நாற்பேர் ஆல லாடுதலொலிப்பேர் அறுவை சித்திரைநா ளாடை. |
209 (4) | இலம்பக மத்தியாய நுதற்சுட்டென் றிருபேராமே
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குண மகிழே யேரி பலங் கனி பயன் காய் சேனை பலங் கிழங் கறுபேராகும் அலங்க லென்பது பூமாலை அசைவொடு தளி ரிலங்கல். |
210 (5) | ஒலி யென்ப திடியே காற்றே யோசை யென்றாகு முப்பேர்
ஒலியலே யாறுந் தோலும் உடுத்தவாடையும் பைந்தாரும் கலுழியே கான்யாறென்ப கலங்கிய நீருமாமே கலை மதிப்பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி. |
211 (6) | பீலயே யாலவட்டம் பெருவரை கலாபி தோகை
பாலிகை யுதடு வட்டம் படைவாளின்முட்டியும்பேர் வேலி யூர் மதில் காவற்பேர் மெத்தை மெல்லணையே சட்டை தோ லிபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை யைம்பேர். |
212 (7) | பாலை யொர் மர நிலம் மந்நிலத்தினிலோர பாடலும்பேர்
வேலையே கடலதற்குமேவிய கரையே காலம் மாலையே யிரவோடந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர் சாலையே குதிரைப்பந்தி யறப்புறந் தானுமாமே. |
213 (8) | அல்லி வெள்ளாம்பல் காயா யகவித ழாகமுப்பேர்
அல் லிரா யிருளே யென்ப ஆக மார்பு டலுமாமே சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீடென்ப வல்லி யாய்ப்பாடி வல்லி வரைவொடு நிகளமாமே. |
214 (9) | இல் லிள்ளாள் இல்லையென்றல் இராசி சா விடம் வீ டாறே
மல் வளம் வலியினோடு மாயவனாடல் முப்பேர் சில்லை யென்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோதாமே. |
215 (10) | வில்லென்ப மூலநாளாம் வெஞ்சிலை யொளியு மப்பேர்
வல் வலி விரைவு சூதா மலர்தலே யெதிர்தல் தோன்றல் புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுஷநாளாம் கொல்லென்ப தசைச்சொல் ஐயங் கொலையேவல் வருத்த நாற்பேர். |
216 (11) | மால் புதன் பெருமை மேக மாயவன் மயக்கங் காற்றே
ஆலோ ட லிரண்டு சொல்லும் ஆமென்ப தல்லவும்பேர் வால் வெண்மை மிகுதி தூய்மை வசந்தனே தென்றல் காமன் சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே. |
217(12) | வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர்மர முப்பேரே
புலம் பொலி தனிமை யச்சம் பொய்யென்ப பொக்கம் பொந்தாம் சலம் பொலி ஞெகிழி குன்றாஞ் செருந்தி பஞ்சரம் வாட்கோரை விலங்கு காற்றளை குறுக்கு மிருகத்தின் பொதுவு மாமே. |
218 (13) | உலகமே திசை வெண் பூமி உயரிகுணஞ் சன முயர்ந்தோர்
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி இலயமே கூத்துங் கூத்தின்விகற்பமு மிருபேரென்ப வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்பு ளாடாம். |
219 (14) | கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர்
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கந் தானாம் சலாகை நன்மணி நாராசஞ் சவளமு மாகுமென்ப விலோதம் பெண்மயிர் பதாகை விட மென்ப நஞ்சுந் தேளும். |
220 (15) | செல் லிடி யேவல் மேகஞ் சிதலை யாகுமென்ப
எல் லொளி பக லிகழ்ச்சி இரவுட னிரவி யைம்பேர் சொல் லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே வளைத்தல் கட்டல் கல் லொலி மலை கல்லென்ப கரண்ட நீர்காக்கை செப்பாம். |
221 (16) | கலி வஞ்ச மொலியே வாரி கடையுகம் வல யைம்பேரே
சிலை யொலி மலை கல் வில்லாஞ் செடியொளி செறிவு தீதாம் தலமென்ப திலை புவிப்பேர் தலை யிடந் தலை விண் ணாதி திலமே மஞ்சாடி யெள்ளாந் தலக மஞ்சாடி பொட்டாம். |
222 (17) | வல்லை கான் விரைவு மைந் தாம் வட மணிவட மா றாம்பு
பல்ல மோர் கணக்கு பாணம் பல்லங் கரடி நாற்பேர் மல்லலே வலி வளப் பேர் வாயி லைம்புலன் கடைப் பேர் முல்லை மல்லிகையே வென்றி முல்லைநன்னிலங் கற்பாமே. |
223 (18) | கோலென்ப தீட்டி வாட்கோல் துகிலிகை துலாஞ் சம்மட்டி
சீலமன்னவன்றன்செங்கோல் திரட்சி யாழ்நரம்போ டம்பு நீலவஞ்சனக்கோலோடு நீளிலந்தையும் பன்னோர்பேர் காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே. |
224 (19) | கூலமே பண்ணிகாரம் புனற்கரை கோ விலங்கின்
வாலோ டாவணமே பாகல் வரம்பொடு குரங் கெண்பேரே கா லிட மரக்கால் பிள்ளை குறுந்தறி வனங் காம் பூற்றம் காலங் குரங் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே. |
225 (20) | கோலமே யழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம்
மாலியே யிரவி கள்ளாம் மாந்தலே மரித் துண்டல் வே லயில் படைக்கலப்பேர் வேதண்டங் கைலை வெற்பாம் சாலி நெற்பொதுவுங் கள்ளு மருந்ததி தானுமாமே. |
226 (21) | உலவை கான் மரத்தின்கொம்பொடுறு தழை விலங்கின்கோடாம்
மலைதலே பொரல் சூடற்பேர் மந்திரி குபேரன் வெள்ளி அலர் பழி விரிபூ நீராம் அவிர்தலே யொளி பீறற்பேர் எலி பூரநா ளெலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம். |
227 (22) | ஆலயங் நகரங் கோயில் யானையின்கூட முப்பேர்
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரஞ் சுசி தருப்பை நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல்கவிப்புலவர்க்கும் பேர் வேலாவலயந்தான் பூமி விரிகட லிருபேராமே. |
228 (23) | சூலியே கருப்பப் பெண்ணுந் துர்க்கைஞ் சிவனு முப்பேர்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம் பால் புடை யியல்பு திக்குப் பகுத்தல் பாலென்னு மைம்பேர் ஏலமே மயிர்சாந்தோ டேலத்தின் பேருமாமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லகரவெதுகை - சூடாமணி நிகண்டு, Sudamani Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தருவாளோ, ஆடுங்கால்