முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 73. உயிரும் தருகுவன்!
புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!
பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.
திணை: காஞ்சி
துறை: வஞ்சினக் காஞ்சி
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் |
5 |
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் கழைதின் யானைக் கால் அகப் பட்ட வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண் |
10 |
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!, இலக்கியங்கள், உயிரும், புறநானூறு, தருகுவன், கால், மடவோன், காதல், கூந்தல், ஆற்றல், பட்ட, காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, சோழன், நலங்கிள்ளி, வந்து, ஆயின்