முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 60. மதியும் குடையும்!
புறநானூறு - 60. மதியும் குடையும்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
திணை: பாடாண்.
துறை : குடை மங்கலம்.
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச், செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் உச்சி நின்ற உவவுமதி கண்டு, கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து, |
5 |
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல் கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன், வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன், |
10 |
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின் மாலை வெண்குடை ஒக்குமால் எனவே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 60. மதியும் குடையும்!, இலக்கியங்கள், வளவன், மதியும், புறநானூறு, குடையும், குடை, எட்டுத்தொகை, சங்க