முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 389. நெய்தல் கேளன்மார்!
புறநானூறு - 389. நெய்தல் கேளன்மார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
நீர் நுங்கின் கண் வலிப்பக் கான வேம்பின் காய் திரங்கக், கயங் களியும் கோடை ஆயினும், ஏலா வெண்பொன் போகுறு காலை, எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்! |
5 |
என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை; இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்; செலினே, காணா வழியனும் அல்லன்; புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து, குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், |
10 |
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன், செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்! ஆத னுங்கன் போல, நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும! |
15 |
ஐதுஅகல் அல்குல் மகளிர் நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 387 | 388 | 389 | 390 | 391 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 389. நெய்தல் கேளன்மார்!, காலத்தில், நெய்தல், ஆதனுங்கன், இலக்கியங்கள், கேளன்மார், அல்லன், புறநானூறு, முதியன், அவன், மகளிர், நீயும், பொருள்களை, நெடுந்தகை, சங்க, எட்டுத்தொகை, நீர், வெண்பொன், வழியனும், குன்றக