முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 370. பழுமரம் உள்ளிய பறவை!
புறநானூறு - 370. பழுமரம் உள்ளிய பறவை!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: வாகை.
துறை: மறக்களவழி.
. . . . . . . . . . . . . . . வி, |
5 |
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல் உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின் பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை, வரிமரல் திரங்கிய கானம் பிற்படப், |
10 |
பழுமரம் உள்ளிய பறவை போல, ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத், துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப, விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப் படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி |
15 |
எருதுகளி றாக, வாள்மடல் ஓச்சி அதரி திரித்த ஆளுகு கடாவின், அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, வெந்திறல் வியன்களம் பொலிக! என்று ஏத்தி இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் |
20 |
வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும; வடிநவில் எகம் பாய்ந்தெனக், கிடந்த தொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார் இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி அழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு |
25 |
செஞ்செவி எருவை திரிதரும்; அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 368 | 369 | 370 | 371 | 372 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 370. பழுமரம் உள்ளிய பறவை!, பறவை, இலக்கியங்கள், உள்ளிய, பழுமரம், புறநானூறு, வந்துள்ளேன், என்னும், ஓச்சி, சங்க, எட்டுத்தொகை, வாகை, திரங்கிய