முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 35. உழுபடையும் பொருபடையும்!
புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!
பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ
சிறப்பு: அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.
நளிஇரு முந்நீர் ஏணி யாக, |
5 |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
10 |
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே! நினவ கூறுவல்: எனவ கேண்மதி! அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு |
15 |
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே; ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ மாக விசும்பின் நடுவுநின் றாங்குக், கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
20 |
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ! வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக், களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை, வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப், பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை |
25 |
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்; அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும் |
30 |
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது, பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக், குடிபுறம் தருகுவை யாயின், நின் அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!, இலக்கியங்கள், உழுபடையும், புறநானூறு, பொருபடையும், பழிக்கும், இயற்கை, உன்னிடம், உனக்கு, கண்ணகன், யாயின், படுவது, எட்டுத்தொகை, சங்க, சிறப்பு, நினதே, தோன்றினும்