முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 290. மறப்புகழ் நிறைந்தோன்!
புறநானூறு - 290. மறப்புகழ் நிறைந்தோன்!
பாடியவர்: அவ்வையார்
திணை: கரந்தை
துறை: குடிநிலையுரைத்தல்
இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர் இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்! நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை, எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன் அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே: |
5 |
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், உறைப்புழி ஓலை போல மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 288 | 289 | 290 | 291 | 292 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 290. மறப்புகழ் நிறைந்தோன்!, இலக்கியங்கள், மறப்புகழ், புறநானூறு, நிறைந்தோன், வேலை, உதவினான், தடுத்து, பாய்ந்து, இவனும், தந்தை, எட்டுத்தொகை, சங்க, தச்சன், நின்று