புறநானூறு - 287. காண்டிரோ வரவே!
பாடியவர்: சாத்தந்தையார்
திணை: கரந்தை
துறை: நீண்மொழி
துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின! கால மாரியின் அம்பு தைப்பினும், வயல் கெண்டையின் வேல் பிறழினும், பொலம்புனை ஓடை அண்ணல் யானை |
5 |
இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும், ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும், தண்ணடை பெறுதல் யாவது? படினே; |
10 |
மாசில் மகளிர் மன்றல் நன்றும், உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 285 | 286 | 287 | 288 | 289 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 287. காண்டிரோ வரவே!, காண்டிரோ, இலக்கியங்கள், வரவே, தண்ணடை, புறநானூறு, வேந்தன், அதனால், உடம்பில், அவனுக்கு, பீடுடையாளன், யானை, அம்பு, சங்க, எட்டுத்தொகை, துடி, புலைய, வயல், இழிசின, வேல்