முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 269. கருங்கை வாள் அதுவோ!
புறநானூறு - 269. கருங்கை வாள் அதுவோ!
பாடியவர்: அவ்வையார்
திணை: வெட்சி
துறை: உண்டாட்டு
குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல் பயிலாது அல்கிய பல்காழ் மாலை, மையிரும் பித்தை பொலியச் சூட்டிப், புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை, |
5 |
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப் பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக் கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின் பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க், |
10 |
கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத், தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 267 | 268 | 269 | 270 | 271 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 269. கருங்கை வாள் அதுவோ!, கருங்கை, இலக்கியங்கள், அதுவோ, புறநானூறு, வாள், துடியன், மொட்டு, மாலையை, பித்தை, அதிரல், எட்டுத்தொகை, சங்க, மாலை