முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 240. பிறர் நாடுபடு செலவினர்!
புறநானூறு - 240. பிறர் நாடுபடு செலவினர்!
பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், வாடா யாணர் நாடும் ஊரும், பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
5 |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப், பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை, சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி, ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
10 |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் வாடிய பசியர் ஆகிப், பிறர் நாடுபடு செலவினர் ஆயினர், இனியே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 238 | 239 | 240 | 241 | 242 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 240. பிறர் நாடுபடு செலவினர்!, இலக்கியங்கள், பிறர், செலவினர், நாடுபடு, அவன், புறநானூறு, என்னும், உடம்பைச், கூகை, அதனால், அண்டிரன், எட்டுத்தொகை, சங்க, காலன், உலகம்