புறநானூறு - 211. நாணக் கூறினேன்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்:
துறை: பரிசில் கடாநிலை.
அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு அணங்குடை அரவின் அருந்தலை துமிய, நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக், குன்றுதூவ எறியும் அரவம் போல, முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று, |
5 |
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென், `வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்` எனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள் |
10 |
கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் நுணங்கு செந்நா அணங்க ஏத்திப், பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் |
15 |
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச் செல்வல் அத்தை, யானே வைகலும், வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின், பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து, |
20 |
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 209 | 210 | 211 | 212 | 213 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 211. நாணக் கூறினேன்!, நாணக், இலக்கியங்கள், கூறினேன், மாறி, புறநானூறு, பரிசில், செல்கிறேன், இன்மையின், பால், பாடப், வெற்றி, முரசு, சங்க, எட்டுத்தொகை, அரவின், நின், வந்த, கொடுமை