முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 165. இழத்தலினும் இன்னாது!
புறநானூறு - 165. இழத்தலினும் இன்னாது!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை. குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
5 |
தாள்தாழ் படுமணி இரட்டும், பூனுதல், ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றெனன் ஆகக்,`கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் |
10 |
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது` என, வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத், தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்; ஆடுமலி உவகையோடு வருவல், ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 165. இழத்தலினும் இன்னாது!, இலக்கியங்கள், இழத்தலினும், இன்னாது, எனக்கு, புறநானூறு, காட்டில், அப்போது, வழங்குவதற்கு, என்ன, கொடுத்தான், அவன், பெற்றுப், சங்க, எட்டுத்தொகை, குமணன், பரிசில், வாளைக், புலவர், இன்மையின்