முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 157. ஏறைக்குத் தகுமே!
புறநானூறு - 157. ஏறைக்குத் தகுமே!
பாடியவர்: குறமகள் இளவெயினி.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது.
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும், பிறர்கை யறவு தான்நா ணுதலும், படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும், வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன் |
5 |
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல், கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்: ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை, எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக், கட்சி காணாக் கடமான் நல்லேறு |
10 |
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும் பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 155 | 156 | 157 | 158 | 159 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 157. ஏறைக்குத் தகுமே!, இலக்கியங்கள், தகுமே, ஏறைக்குத், புறநானூறு, தவறு, செயல், கோடல், செய்தால், ஏறைக், எட்டுத்தொகை, சங்க, கோன், குறவர்