முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 14. மென்மையும்! வன்மையும்!
புறநானூறு - 14. மென்மையும்! வன்மையும்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி
கடுங்கண்ண கொல் களிற்றால் காப் புடைய எழு முருக்கிப், பொன் இயல் புனை தோட்டியான் முன்பு துரந்து, சமந் தாங்கவும்; பார்உடைத்த குண்டு அகழி |
5 |
நீர் அழுவம் நிவப்புக் குறித்து, நிமிர் பரிய மா தாங்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! |
10 |
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை, புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் |
15 |
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு இருநிலத்து அன்ன நோன்மை செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 14. மென்மையும்! வன்மையும்!, இலக்கியங்கள், மென்மையும், உள்ளது, புறநானூறு, வன்மையும், அல்லது, வலிமையாக, மென்மையாக, தொழில், உண்டு, வழங்கவும், சங்க, எட்டுத்தொகை, தாங்கவும், அகழி, நின், நாற்றத்த