முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 130. சூல் பத்து ஈனுமோ?
புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ? நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு, இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் |
5 |
குடகடல் ஓட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 128 | 129 | 130 | 131 | 132 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?, இலக்கியங்கள், பத்து, சூல், புறநானூறு, ஈனுமோ, சங்க, எட்டுத்தொகை