புறநானூறு - 102. சேம அச்சு!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
எருதே இளைய; நுகம் உண ராவே; சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே; அவல் இழியினும், மிசை ஏறினும், அவணது அறியுநர் யார்? என, உமணர் கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, |
5 |
இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள் நாள்நிறை மதியத்து அனையை; இருள் யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 102. சேம அச்சு!, அச்சு, இலக்கியங்கள், பொகுட்டெழினி, புறநானூறு, பாரம், நுகத்தில், இளவரசன், வண்டியில், அதியமான், எட்டுத்தொகை, சங்க, இருள்