முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச்
சிறப்புக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : புண்ணுடை எறுழ்த் தோள்
வால் மருப்பின் களிற்று யானை மா மலையின் கணம் கொண்டு, அவர் எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க; சாந்து புலர்ந்த வியல் மார்பின், |
5 |
தொடி சுடர் வரும் வலி முன் கை, புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால், பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள், ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ, 'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, |
10 |
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ, அனையை ஆகன்மாறே, பகைவர் கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக் கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி, புல வரைத் தோன்றல் யாவது-சினப் போர், |
15 |
நிலவரை நிறீஇய நல் இசை, தொலையாக் கற்ப!-நின் தெம்முனையானே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கால், தோள், எறுழ்த், புண்ணுடை, வண்ணம்