முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச்
சிறப்பு
பதிற்றுப்பத்து - 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏம வாழ்க்கை
கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு, வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண், கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர, வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது |
5 |
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய, நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது, வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு, கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன், |
10 |
அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து, நாமம் அறியா ஏம வாழ்க்கை வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும் இன் நகை மேய பல் உறை பெறுபகொல்- பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ, |
15 |
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின், ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச் செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல், அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும் மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே? |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அல்லது, வாழ்க்கை, வண்ணம்