முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும்
கூறுதல்
பதிற்றுப்பத்து - 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மரம் படு தீம் கனி
கொலை வினை மேவற்றுத் தானை; தானே இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்: செல்லாமோதில், பாண்மகள்! காணியர்- மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது, அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி |
5 |
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும், மறாஅ விளையுள் அறாஅ யாணர், தொடை மடி களைந்த சிலையுடை மறவர் பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, |
10 |
வரும் கடல் ஊதையின் பனிக்கும், துவ்வா நறவின் சாய் இனத்தானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தீம், வினை, மரம், வண்ணம்