முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன்
வென்றிச் சிறப்புக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : குண்டு கண் அகழி
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர் வாடா யாணர் நாடு திறை கொடுப்ப, 'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி, கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், |
5 |
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், கோள் வல் முதலைய குண்டு கண் அகழி, வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை, ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, |
10 |
நின்னின் தந்த மன் எயில் அல்லது, முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும், பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!- எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் |
15 |
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின், தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி, வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் ஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி, மேம்படு வெல் கொடி நுடங்க, |
20 |
தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், எயில், நீவி, அகழி, குண்டு, வண்ணம்