முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 28. நாடு காத்தற் சிறப்பு
பதிற்றுப்பத்து - 28. நாடு காத்தற் சிறப்பு
துறை : நாடு வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உருத்து வரு மலிர் நிறை
திரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர் பைங் கண் யானைப் புணர் நிரை துமிய, உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால், கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது, |
5 |
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின். விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய- கோடை நீட, குன்றம் புல்லென, அருவி அற்ற பெரு வறற் காலையும்; நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச் |
10 |
சீருடை வியன் புலம்-வாய் பரந்து மிகீஇயர், உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச் செந் நீர்ப் பூசல் அல்லது, வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரு, மலிர், உருத்து, வண்ணம், நாடு