முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்
சிறப்பும்
பதிற்றுப்பத்து - 19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வளன் அறு பைதிரம்
கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர் கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப, ஒண் பொறிக் கழற் கால் மாறா வயவர் திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப, செங்கள விருப்பொடு கூலம் முற்றிய |
5 |
உருவச் செந் தினை குருதியொடு தூஉய், மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர், கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச, வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து, அவ் வினை மேவலை: ஆகலின், |
10 |
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற அரிது பெறு பாயற் சிறு மகிழானும் கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு யார் கொல்? அளியை- |
15 |
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து; நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் அன்ன ஆயின; பழனம் தோறும் அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, |
20 |
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப, அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர் தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த, 'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி, |
25 |
காணுநர் கை புடைத்து இரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கால், பைதிரம், வளன், வண்ணமும், சிறப்பும்