நற்றிணை - 36. குறிஞ்சி
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் கல்லக வெற்பன் சொல்லின் தேறி, யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
5 |
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, ஆனாக் கௌவைத்துஆக, தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? |
குறிய முன்னங்காலையுடைய கொல்லவல்ல பெரிய ஆண்புலி; பொலிவுபெற்ற நெற்றியையுடைய கரிய பிடியானை புலம்புமாறு நீரற்ற அகன்ற காட்டினிடத்துப் பெரிய களிற்று யானையைத் தாக்கி¢க் கொல்லா நிற்கும் மலையிடத்தையுடைய சிலம்பன்; 'நின்னிற் பிரியேன்' என்று கூறிய பொய்ம்மொழியை மெய்யெனத் தௌ¤ந்து; யாம் எம் நலத்தை இழந்தேவிட்டேம், ஆதலின் இந்நடுயாமத்துக் கண் துயிலாதொழிந்தனம்; பழிதூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியராற் கூறப்படும் அம்பலொடு சேர ஒலிமிக்க இவ்வூர்; மேன்மையில்லாத தீய சொற்களைக் கூறுதற்கு வேண்டிய உரைகளை ஏறட் டெடுத்துக்கொண்டு அமையாத பழி மொழிமையுடையதாக எம்மைப்போல் எதனை இழந்தது? இந் நடுயாமத்திலும் துயின்றிலதே;
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - சீத்தலைச்சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, இழந்தது, அம்பலொடு, யாம், இரும்