நற்றிணை - 33. பாலை
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை, முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை, புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து, கல்லுடைப் படுவில் கலுழி தந்து, நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், |
5 |
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர் அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை, இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, |
10 |
நல் அக வன முலைக் கரை சேர்பு மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே. |
எம்பெருமானே ! தலைமகள் என்னை நோக்கி மெல்லியால் ! மேலைத்திசையிற் செல்லுகின்ற ஆதித்த மண்டிலம் மறைந் தொழிதலாலே பரவிய மாலைப் பொழுதில்; பிளவுபட்ட நீண்ட மலைச்சார்பில் வன்னிலத்தமைந்த சிறு குடியின்கண்; அச்சமிக்கிருக்கும் பொலிவழிந்த பொதியிலில்; கல்லையுடைய குழிகளிலுள்ள கலங்கனீரைக் கொணர்ந்து கொடுத்து; நிறைந்த மழையைக் கண்டறியாத குறைந்த உணவையுடைய இராப் பொழுதிலே; துவர்த்த நிறத்தையுடைய ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையுமுடைய ஆறலைகள்வர் நெறி நோக்கியிருக்கும் அச்சம் வரும் வழியின்கண்ணே; அவர் செல்லக் கருதுவர் எனின் யாம் மறுக்கவல்லேமோ என்று; வெளியிற் போதாமே விம்மிய சொல்லையுடையளாய் என் முகத்தை நோக்கலும்; அவ்வளவில் அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து; நல்ல மார்பின்கணுள்ள அழகிய முலைமுகட்டில் விழுந்து பரக்கும்படி மல்கிய கண்ணீர்¢ பரந்தன; ஆதலின் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருக்குந் தன்மையள்?
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - இளவேட்டனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மலர், நோக்கி, எனின், அவர், பரந்த