நற்றிணை - 300. மருதம்
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
5 |
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
10 |
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் அட்டில் ஓலை தொட்டனை நின்மே. |
நெய்வடிந்தாலொத்த பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தையுடைய பாணர் தலைவனே!; விளங்குகின்ற தொடியணிந்த அரசகுமாரி சினங்கொண்டவுடன் அவ்விடத்தில்; மடப்பத்தையுடைய தோழியர் குழாம் கைதொழுது இறைஞ்சினாற்போல; மிக்க காற்று மோதுதலானே ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்காநிற்கும்; தண்ணிய துறையையுடைய ஊரன் ஏனையொருத்திக்குப் பரியமளிக்க வேண்டிச் செல்லுவான் இடையே எம்மைக் காண்டலானே சிறிய வளையினையுடைய இவட்குரிய விலை இதுவென்று; தன் பெரிய தேரை அலங்கரித்து எமது முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறொரு பரத்தையின் மனையகம் நாடிச் சென்றொழிந்தனன் கண்டாய்; அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின்னே செல்லாது போரிலே பெரிய புண்ணால் அழகுபெற்ற 'தழும்பன்' என்பவனது ஊணூரிடத்துள்ள; பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றல்போல; எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றனை;
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 298 | 299 | 300 | 301 | 302 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, தழும்பன், வந்த, செல்லாது, வந்து, ஊரன், விலை, நீயும், ஆம்பல்