நற்றிணை - 284. பாலை
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண், உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம், 'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்: 'செய்வினை முடியாது எவ்வம் செய்தல் |
5 |
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என, உறுதி தூக்காத் தூங்கி, அறிவே, 'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை, ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங் கயிறு போல, |
10 |
வீவதுகொல் என் வருந்திய உடம்பே? |
என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதிப்பாட்டை ஆராய்கையாலே 'ஏ நெஞ்சமே! நீ நிலையிலே பொருந்தி நின்று சில பொழுதளவும் மிக விரையாதே கொள்' என்று கூறாநிற்கும்; அவ்விரண்டும் மாறுபடுதல் கொண்டமையின் அவற்றிடை நின்று வருந்துகின்ற என் உடம்பானது; விளங்கிய தலையிலே தாங்கிய கொம்பினையுடைய களிற்றியானை ஒன்றோடோன்று மாறாகப் பற்றி யீர்த்த தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இற்றொழிவது போல; அழிய வேண்டுவது தானோ? இஃதொரு கொடுமை யிருந்தவாறு நன்று!;
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது. - தேய்புரிப் பழங்கயிற்றினார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 282 | 283 | 284 | 285 | 286 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்று, கூறாநிற்கும், நின்று, உடைய, விளங்கிய, நிறம், என்னும், கயிறு, இருண்ட