நற்றிணை - 273. குறிஞ்சி
இஃது எவன்கொல்லோ- தோழி!- மெய் பரந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என, வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், |
5 |
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என் கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் குன்ற நாடனை உள்ளுதொறும், நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? |
10 |
தோழீ! நின் உடம்பெங்கும் பரந்து துன்பமிக்கு மயங்கிய துயரத்தை நோக்கி; நம்பாலுள்ள விருப்பத்தாலே தானும் வருத்தமுற்று நம்மிடத்தில் நிகழ்ந்தது அறியாது முருகவேளுக்கு வெறியெடுத்த நம் அன்னையை நோக்கி; இது முருகணங்கு என்று வேலன் கூறாநிற்கும் என்பர்; ஆதலின் நிறமிக்க பெரிய யானை நீர்முகந்து கொள்கின்ற நெடிய சுனையின் கண்ணே அமைந்து; நீண்டுற்று என் கண்போல்கின்ற நீலமலர்; தண்ணியவாய் மணமிகும் மலைநாடனை நினைக்குந்தோறும்; அவன் இயல்பாகத் தந்த கவலையானது எனது நெஞ்சை நடுங்கச் செய்யாநின்றது; இஃது இனி எப்படியாகி முடியுமோ?
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 271 | 272 | 273 | 274 | 275 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அமைந்து, அவன், நின், நோக்கி, யானை, வேலன், தோழி, பரந்து, அறியாது, வெறி, இஃது