நற்றிணை - 217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக் காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம், இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது கருங் கால் வேங்கை ஊறுபட மறலி, பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் |
5 |
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து ஊடல் உறுவேன்- தோழி!- நீடு புலம்பு சேண் அகல நீக்கி, புலவி உணர்த்தல் வன்மையானே. |
தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய நம் காதலன்; பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்!
தலைமகள் வாயில் மறுத்தது. - கபிலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 215 | 216 | 217 | 218 | 219 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், கரிய, புலி, போலக், செல்வம்